யாழ்.மாவட்ட தொழில் அலுவலகத்தினால் தனியார் வர்த்தக நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் வேலை நேரம்,விடுமுறை மற்றும் தொழில் சட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று வணிகர் கழகத்தில் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றது.
இதன்போது சாதாரணமாக ஊழியர் ஒருவரது வேலை நேரம் 8 மணித்தியாலங்களாகும். அதற்கு மேலதிகமாக வேலையில் ஈடுபட்டால் மேலதிக கொடுப்பனவு வழங்கப்படவேண்டும் என யாழ்.மாவட்ட தொழில் அலுவலகத்தின் உதவித் தொழில் ஆணையாளர் திருமதி ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் வர்த்தக நிலையங்கள் தோறும் ஊழியர்களின் வரவுப்பதிவேடு கட்டாயமாக வைத்திருக்கவேண்டும். இதனால் ஊழியர்களுக்கு இழைக்கப்படும் வேலைப்பழு தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கமுடியும்.
மேலும் ஊழியர்களின் மாதாந்த சம்பளமாக சாதாரணமாக 10515 ரூபா வழங்கவேண்டும் என்பதுடன் வாரத்தில் 45 மணித்தியாலங்களே வேலை செய்யவேண்டும் இதனை மீறும் முதலாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கமுடியும் எனவும் இக் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.