Ad Widget

அரிசி மூடைகள் திருட்டு

ஊர்காவற்துறை நாராந்தனை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கக்கடையில் இருந்த 15 ஆயிரம் ரூபாய் பெறுமதியான அரிசி மூடைகள் நேற்று சனிக்கிழமை (30) இரவு திருடப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறைப் பொலிஸார் இன்று ஞாயிற்றுக்கிழமை (31) தெரிவித்தனர்.

சங்கக்கடையின் பூட்டை உடைத்து உள்நுழைந்து, அங்கிருந்து 50 கிலோ கிராம் நிறையுடைய 4 அரிசி மூடைகள் மற்றும் 25 கிலோ நிறையுடைய 1 அரிசி மூடை ஆகியனவே திருடப்பட்டுள்ளன.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related Posts