Ad Widget

சுப்பர் சிங்கர் சாம்பியன் சுபவீண் பெற்றோரின் பொலிகண்டி வீட்டில்

அண்மையில் சிறுவர், சிறுமியர்களுக்காக சண் தொலைக்காட்சியில் நடந்த ‘சண் சுப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியில் முதலாமிடத்தைப் பெற்ற இலங்கைத் தமிழர் பரம்பரையைச் சேர்ந்த பவானந்தன் சுபவீண் (வயது 14) இலங்கை வந்துள்ளார்.

 

subaveen

சுபவீணின் தகப்பன் பவானந்தனும் அவரது தாயார் திருமதி பவானந்தனும் வடமராட்சி பொலிகண்டியைச் சேர்ந்தவர்கள்.இப்போது இவர்கள் கனடாவாசிகள். சுபவீண் கனடாவில் பிறந்தவர். கடந்த எட்டு மாதங்களாக சென்னையில் நின்று இந்த இரண்டாவது ‘சுப்பர் சிங்கர்’ போட்டியில் இறுதி வரை பங்குபற்றி முதலாமிடத்தை பெற்றவர் சுபவீண். அதற்கான பரிசுத் தொகையாக இந்தியப் பணத்தில் ஐந்து லட்சம் ரூபா வென்றவர். தனது பெற்றோர்களுடனும் தம்பி, தங்கையுடனும் சுபவீண் தற்போது தங்களது பூர்வீகத் தாயகத்துக்கு வருகை தந்துள்ளார். சிலவாரங்கள் இக்குடும்பம் பொலிகண்டியில் தங்களின் பூர்வீக இல்லத்தில் தங்கியிருக்கத் திட்டமிட்டுள்ளார்கள்.

இதற்கு முன்னர் ஒரு தடவையும் சுபவீண் இலங்கை வந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts