Ad Widget

வயலிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது

நேற்று மாலை 5 மணியளவில் ஆண் ஒருவரின் சடலம் சாவகச்சேரி தனங்கிளப்பு பிரதேசத்தில் A32 வீதிக்கு அருகிலுள்ள வயலிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

வயலிலுள்ள நீரில் தலை மூழ்கிய நிலையில் கோவிலாக்கண்டி மேற்கு தச்சன்தோப்பைச் சேர்ந்த சோமசுந்தரம் குணரத்தினம் ( 48 ) என்பவரே சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த சாவகச்சேரி நீதிமன்ற பதில் நீதவான் செ.கணபதிப்பிள்ளை விசாரணைகளை மேற்கொண்டார். விசாரணையை அடுத்து பிரேத பரிசோதனைக்காக சடலம் யாழ்.போதனாவைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது .

சாவகச்சேரிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Related Posts