Ad Widget

கொக்குவில் பகுதியில் பற்றைக்குள்ளிருந்து சிலைகள் மீட்பு

Hindu-templeகொக்குவில், கேணியடிப் பகுதியில் உள்ள பற்றைக்குள் வீசப்பட்டிருந்த இரு சுவாமி சிலைகள் இன்று வெள்ளிக்கிழமை பொது மக்களால் மீட்கப்பட்டு யாழ் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இன்று காலை பொதுமக்களால் குறித்த இரண்டு சிலைகளும் கண்டெடுக்கப்பட்டு அப்பகுதி கிராம சேவையாளரிடம் தெரியப்படுத்தப்பட்ட நிலையில் யாழ். பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

குறி;த்த இரண்டு சிலைகளும் கோயில் ஒன்றில் இருந்து திருடப்பட்டிருக்கலாம் என்றும் கொள்ளையர்கள் அப்பகுதியில் இந்த சிலைகளை விட்டுவிட்டுச் சென்றிருக்கலாம் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Related Posts