எச்சரிக்கை! 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு அலைகள் எழும்பக்கூடும்!!

கங்கேசன்துறையிலிருந்து மன்னார், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகள் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தால் எச்சரிக்கை அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கங்கேசன்துறையிலிருந்து மன்னார், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடலுக்கு அப்பாலுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50-60 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன், அந்த கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படலாம் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலாபத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடலுக்கு அப்பாலுள்ள கடற்பரப்புகளில் கடல் அலைகளின் உயரம் சுமார் 2.0-3.0 மீற்றர் வரை உயரக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

எனவே, இது குறித்து அவதானத்துடன் செயற்படுமாறும், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இது தொடர்பாக விடுக்கப்படும் அடுத்தடுத்த அறிவிப்புகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும் மீனவர்கள் மற்றும் கடற்சார் சமூகத்தினரிடம் அந்த திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Related Posts