பொலிஸ்மா அதிபரிடம் நேரடியாக முறைப்பாடுகளை சமர்ப்பிக்கும் வசதி!

இலங்கை காவல்துறையினரால் அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ள “Tell the IGP” திட்டம், ஏதேனும் சம்பவம் அல்லது இணையவழிச் செயல்பாடு தொடர்பான முறைப்பாடுகளை நேரடியாகக் பொலிஸ்மா அதிபரிடம் (IGP) சமர்ப்பிப்பதற்கான வாய்ப்பை பொதுமக்களுக்கு வழங்கியுள்ளது

இத் திட்டம் 2026 ஆம் ஆண்டில் மேம்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இச்சேவையின் மூலம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நபர்கள் சிங்களம், தமிழ் அல்லது ஆங்கில மொழிகளில் முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல், போக்குவரத்து விதிமீறல்கள், பொது இடையூறுகள், ஊழல் மற்றும் பிற குற்றங்களை இதன் மூலமாக பொலிஸ்மா அதிபரிடம் நேரடியாக தெரிவிக்கலாம்.

பெறப்படும் முறைப்பாடுகள் பிரிவுசார் அதிகாரிகளால் சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு, உடனடியாக விசாரணை அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர்.

ஒரு முறைப்பாட்டுக்கு நியாயமான தீர்வு காணப்படாவிட்டால், மேலதிக மீள்ஆய்வுக்காக அப்பிரச்சினையை பொலிஸ்மா அதிபரிடம் மீண்டும் சமர்ப்பிப்பதற்கான வசதி இம்முறையில் உள்ளது.

இச்சேவையை அதிகாரப்பூர்வ பொலிஸ் திணைக்களத்த்தின் இணையதளமான www.police.lk, அதற்கென ஒதுக்கப்பட்ட https://telligp.police.lk எனும் இணைப்பு அல்லது telligp@police.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றின் மூலம் அணுகலாம்.

சேவை வழங்கலை வலுப்படுத்தும் வகையில், 48 பிராந்திய பொலிஸ் பிரிவுகளில் கணினி இயக்குநர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் இச்சேவை நாடு முழுவதும் திறம்படச் செயல்படுத்தப்படுவது உறுதி செய்யப்படுகிறது.

பொதுமக்களின் முறைப்பாடுகளுக்கு மிகவும் திறமையான மற்றும் விரைவாகப் பதிலளிக்கக்கூடிய ஒரு தளத்தை வழங்கும் நோக்கத்துடன், பொலிஸ்மா அதிபரின் (நேரடி மேற்பார்வையின் கீழ் இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts