Ad Widget

60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் வழங்கும் நடவடிக்கை நாளை ஆரம்பம்!

நாட்டின் சில மாகாணங்களில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் வழங்கும் நடவடிக்கை நாளை (புதன்கிழமை) முதல் ஆரம்பமாகவுள்ளது.

அனுராதபுரம், அம்பாறை மாவட்டங்கள் மற்றும் மேல், தென் மாகாணங்களில் உள்ள 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு முதலில் பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன.

அதற்கமைவாக இரண்டாவது தடுப்பூசி செலுத்தப்பட்டு 03 மாதங்கள் முழுமையானவர்களுக்கே இவ்வாறு தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் செலுத்தப்படவுள்ளது.

முதலாவதாக எந்த தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தாலும் மூன்றாவது தடுப்பூசியாக பைசர் தடுப்பூசி வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர், பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts