Ad Widget

கோரோனா நோயாளி தப்பி ஓட்டம்; கண்டுபிடிக்க பொதுமக்களிடம் உதவிக் கோரிக்கை

கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நோயாளி ஒருவர் கொஸ்கம வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக கொவிட் 19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது

அவரை அடையாளம் காண்பவர்கள் உடனடியாக 119 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அறியத்தருமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்.

26 வயதுடைய அந்த நபர் கொஸ்கம வைத்தியசாலையில் உள்ள கோவிட் -19 சிகிச்சை நிலையத்தில் இன்று அதிகாலை ஒரு மணிக்கு சேர்க்கப்பட்டார்.

அவர் இன்று காலை 6 மணியளவில் வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரைத் தேடும் பணியில் பொலிஸ் பிரிவுகள் ஈடுபட்டுள்ளன.

Related Posts