Ad Widget

யாழில் மீனவர்களின் படகுகளை பதிவுசெய்யும் நடவடிக்கை முன்னெடுப்பு!

யாழ்ப்பாணத்தில் காணப்படும் பதிவு செய்யப்படாத படகுகளை பதிவு செய்யும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கமைய, கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளினால் குறித்த நடவடிக்கை கடந்த சில நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கடந்த காலங்களில் பருவகால மீனவர்களிடமிருந்தும் தென்னிலங்கை பிரதேசங்களில் இருந்தும் யாழ்ப்பாண மீனர்வர்களினால் கொள்வனவு செய்யப்பட்ட கடற்றொழில் திணைக்களத்தில் பதிவுசெய்யப்படாமல் இருந்த சுமார் 183 படகுகள் இவ்வாறு பதிவுசெய்யப்படுகின்றன.

இந்த நடவடிக்கையால், அண்மைக்காலமாக அதிகரித்துள்ள கடல்வழி போதைப்பொருள் உட்பட்ட கடத்தல் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கு அதிகாரிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளின்போது எதிர்கொள்ளும் அசெகரியங்களை மீனவர்கள் தவிர்க்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், படகுகளைப் பதிவுசெய்வதன் மூலம் காப்புறுதி, வங்கிக் கடன்களைப் பெறுவதல் உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை கடற்றொழிலாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும் என கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேபோன்று, வடக்கின் ஏனைய கடற்றொழில் மாவட்டங்களிலும் பதிவுசெய்யப்படாத படகுகள் காணப்படுகின்ற நிலையில், அவற்றையும் பதிவுசெய்வதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கு அமைய விசேட அணி செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts