ஏழாலையில் முதியவரின் சடலம் எரிகாயங்களுடன் நிலையில் மீட்பு!!

ஏழாலையில் எரிகாயங்களுடன் முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. [caption id="attachment_101888" align="aligncenter" width="1254"] crime scene tape focus on word 'crime' in cenematic dark tone with copy space[/caption] மயிலங்காடு முருகமூர்த்தி ஆலயத்துக்கு அண்மையாகவே இன்று காலை சடலம் மீட்கப்பட்டது என்று சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த நடேசமூர்த்தி...

ஆனைப்பந்தியில் வீதியில் பயணித்த முதியவர் சரிந்து வீழ்ந்து உயிரிழப்பு!!

யாழ்பாணம், ஆனைப்பந்தி- நாவலர் வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவர் ஒருவர் வீதியில் சரிந்து வீழ்ந்து உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இன்று மாலை 6.25 மணியளவில் இடம்பெற்றது. சம்பவத்தில் ஓட்டுமடத்தைச் சேர்ந்த தம்பு வாமதேவன் (வயது-68) என்பவரே உயிரிழந்தவராவார். உறவினர் வீடு ஒன்றுக்குச் சென்று திரும்பிய நிலையிலேயே முதியவர் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது. சம்பவத்தையடுத்து 1990...
Ad Widget

அடையாள அட்டை இறுதி இலக்க நடைமுறை நாடுமுழுவதும் நாளை முதல் நடைமுறைக்கு – பொலிஸ்

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட இடங்களில் மாத்திரமே அடையாள அட்டை இலக்கத்தின் அடிப்படையில் அத்தியாவசிய பொருள்களைக் கொள்வனவு செய்ய வெளியில் செல்ல முடியும் என்று பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண விளக்கமளித்துள்ளார். எனினும் அவசர நோய்க் காரணங்கள் மற்றும் நோய்த் தொற்றுத் தொடர்பான மருத்துவ ஆலோசனையைப் பெற, கிளிக் அட்டைகளுடன் வைத்தியசாலைகளுக்கு செல்வோரிடம் இந்த...

கிளிநொச்சி அழகாபுரி பாடசாலையை விமானப்படையினர் பொறுப்பேற்றனர்!

கிளிநொச்சி, இராமநாதபுரம் கிழக்கு அழகாபுரி அ.த.க.பாடசாலையினை கிளிநொச்சி இரணைமடு விமானப் படையினர் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரின் அனுமதியுடன் பொறுப்பேற்றுள்ளனர். இரணைமடு விமானப்படை முகாமின் ஒரு பகுதி தற்போது கொரோனா தனிமைப்படுத்தல் நிலையமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றமையால் அங்குள்ள விமானப் படையினர் தற்காலிகமாக தங்குவதற்கு எனத்தெரிவித்து குறித்த பாடசாலையினை பொறுப்பேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விமானப்படையின் அதிகாரிகள் வடக்கு...

கொரோனோ பரிசோதனையை வடக்கில் உடனடியாக அதிகரிக்க வேண்டும்- மருத்துவர் காண்டீபன்

கொரோனோ தொற்று பரிசோதனை வடக்கில் உடனடியாக அதிகரிக்க வேண்டுமென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வட மாகாண இணைப்பாளர் மருத்துவர் த.காண்டீபன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அனுப்பி வைத்துள்ள அறிக்கையில், “வெலிசறை கடற்படை முகாமிலிருந்து வீடு திரும்பிய சிப்பாய்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகி வருவதனால் அவர்கள் விடுமுறையில் சென்ற மாவட்டங்கள் நான்கு என மொத்தமாக கொரோனா...

யாழ். பல்கலையின் வெளிமாவட்ட மாணவர்களின் செலவுகளை ஏற்றார் தியாகி அறக்கொடை ஸ்தாபகர்

யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் வெளிமாவட்ட மாணவர்களின் முழுச் செலவையும் ஏற்றார் தியாகி அறக்கொடை நிலையத்தின் ஸ்தாபகர் வாமதேவன் தியாகேந்திரன். கொரோனா தொற்று ஊரடங்கு சட்டம் காரணமாக சொந்த இடங்களுக்குப் போகமுடியாமல் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த வெளிமாவட்ட மாணவர்களின் உணவுத் தேவையையும் அவர்கள் தமது இடங்களுக்குச் செல்வதற்கான செலவுகளையும் இவரே ஏற்றுள்ளார். அதாவது, மட்டக்களப்பு மற்றும் மலையக...

இதுவரை 95 கடற்படையினருக்கு கொரோனா – மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 477 ஆக அதிகரிப்பு!!

இதுவரை 95 கடற்படை வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். இவர்களில் 68 பேர் வெலிசர முகாமில் இருந்தவர்கள் எனவும் ஏனைய 27 பேரும் விடுமுறைக்காக சென்றிருந்தவர்கள் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 477 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஊரடங்கு சட்ட நடைமுறைகளுக்கு மத்தியில் மக்கள் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள்

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மே மாதம் 04ஆம் திகதி திங்கள் அதிகாலை 5.00 மணி வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும். ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 27 திங்கள் அதிகாலை 5.00 மணிக்கு நீக்கப்பட்டு இரவு 8.00 மணிக்கு மீண்டும்...

கலாச்சார சீரழிவு இடம்பெற்ற வீடு யாழில் முற்றுகை ; இரு பெண்கள் உட்பட மூவர் தனிமைப்படுத்தல்

யாழ்ப்பாணம் மாநகரப் பகுதியில் உள்ள வீடொன்றில் கலாசார சீரழிவு இடம்பெற்று வந்த நிலையில் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு வெளிமாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் இருவர் பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். பின்னர் அங்கிருந்த இரு பெண்களையும் ஆண் ஒருவரையும் அந்த வீட்டிலையே தனிமைப்படுத்த பொலிஸார் மற்றும் பொதுசுகாதார பரிசோதகர்கள் ஆகியோர் நடவடிக்கை எடுத்தனர். யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் மனோகரா தியேட்டருக்கு...

பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், மேலதிக வகுப்புகள் என்பன மறு அறிவித்தல்வரை மூடப்படும் – ஜனாதிபதி செயலகம்

பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், மேலதிக வகுப்புகள், ஏனைய கல்வி நிறுவனங்கள் மற்றும் திரையரங்குகள் மீண்டும் அறிவிக்கும் வரை மூடப்பட்டிருக்க வேண்டும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தல் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்க்பபட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம்...

திங்கட்கிழமை முதல் சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க போக்குவரத்துத் திணைக்களம் தீர்மானம்!

கோவிட் – 19 வைரஸ் காணப்படுகின்ற காலப்பகுதியில் மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் தமது சேவைகளை மீண்டும் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது. இவ்வாறு மீளவும் சேவைகளை ஆரம்பிக்கும்போது கோவிட்-19 வைரஸ் மேலும் பரவக்கூடிய ஆபத்து ஏற்படாத வகையில், அலுவலக சூழலினதும், தமதும், மக்களுடையதும் பாதுகாப்பை ஆகக்கூடிய மட்டத்தில் பேண வேண்டியது அனைவரதும் பொறுப்பு என்பதை கவனத்திற் கொள்ள...

அடையாள அட்டையின் கடைசி எண் குறியீட்டின் அடிப்படையில் அத்தியாவசிப் பொருள்கள் வாங்கச் செல்ல அனுமதி

உணவு மற்றும் மருந்துப் பொருள்கள் போன்ற அத்தியாவசிய பொருள்களை கொள்வனவு செய்வதற்காக மட்டுமே எவரும் தமது வீடுகளில் இருந்து வெளிச்செல்ல வேண்டும். அத்தகைய பொருள்களை கொள்வனவு செய்வதற்கு நடந்து சென்றடைய முடியுமான அருகில் உள்ள விற்பனை நிலையங்களை தெரிவுசெய்ய வேண்டும். இவ்வாறு ஜனாதிபதி ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்க்ப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;...

இன்றும் நாளையும் நாடளாவிய ரீதியில் பொலிஸ் சுற்றிவளைப்பு நடவடிக்கை!!

இன்றும் நாளையும் நாடளாவிய ரீதியில் பொலிஸ் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹண இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் நேற்றிரவு 8 மணி முதல் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், ஆகிய மாவட்டங்களிலும் கேகாலை மாவட்டத்தின் வரக்காபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதி,...

நீரில் மூழ்கியமையால் செந்தூரன் உயிரிழந்துள்ளார்!!

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் இலகுநாதன் செந்தூரன், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என்றும் அவரது உடலில் அடிகாயங்கள் எவையும் இல்லை என சட்ட மருத்துவ அதிகாரியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் இலகுநாதன் செந்தூரன், நேற்று மாலை முதல்...

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மாவட்டங்களில் மே 4 வரை ஊரடங்கு நீடிப்பு!

கோரோனா வைரஸ் தொற்றுள்ள அபாய வலயங்களான கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் நடைமுறையில் இருக்கும் ஊரடங்குச் சட்டம் வரும் மே 4ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5 மணிக்குவரை நீடிக்கப்படுல் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கு பிரவேசிப்பது மற்றும் அங்கிருந்து வெளியேறிச் செல்வது...

வட்டுக்கோட்டை பொலிஸாரின் அடாவடி தொடர்கிறது; குடிதண்ணீர் எடுக்கச் சென்ற முதியவர் மீது தாக்குதல்

ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள நேரத்தில் வீதிகளில் நடமாடினார்கள் என குற்றம் சாட்டி முதியவர்கள் மீது வட்டுக்கோட்டை பொலிஸார் மூர்க்கத்தனமாக தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். [caption id="attachment_101888" align="aligncenter" width="1254"] crime scene tape focus on word 'crime' in cenematic dark tone with copy space[/caption] நாடுமுழுவதும் ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள...

காப்புறுதி நிறுவனத்திடமிருந்து தப்புவதற்காக கொரோனாவை பயன்படுத்திய குடும்பப் பெண்!!

காப்புறுதி நிறுவனத்திடமிருந்து தப்புவதற்காக கொரோனாவை பயன்படுத்திய பெண்ணால் நல்லூர்ப் பகுதியில் நேற்றுக் காலை பரபரப்பு நிலவியது. நுல்லூர்ப் பகுதியில் வசிக்கும் ஒருவர் காப்புறதி நிறுவனம் ஒன்றிலிருந்து காப்புறதியைப் பெற்றுள்ளார் இதற்காக மாதத் தவணை பணம் செலுத்தும் நிலையில் அவரது வீட்டுக்கு நேற்றுக்காலை காப்புறதி நிறுவனத்தினர் பணம் ஆறவீட்டுக்குச் சென்றுள்ளனர். இதன்போது தனது கணவருக்கு அதிக இருமலும்...

நாடுமுழுவதும் சனி, ஞாயிறு முழுமையான ஊரடங்கு நடைமுறை!!

நாடுமுழுவதும் ஊரடங்கு சட்டம் இன்று ஏப்ரல் 24 வெள்ளிக்கிழமை இரவு 8.00 மணிக்கு நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் வரும் ஏப்ரல் 27 திங்கட்கிழமை காலை 5.00 மணி வரை நடைமுறையில் இருக்கும். அந்தவகையில் வார இறுதி நாள்களான 25 சனி மற்றும் 26 ஞாயிறு ஆகிய தினங்கள் நாடுமுழுவதும் ஊரடங்கு சட்டம் தொடர்ச்சியாக நடைமுறையில் இருக்கும்....

வெளிநாட்டவர்களின் இரண்டு வீடுகளை உடைத்துத் திருடிய குடும்பத்தலைவர் கைது!!

யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியில் அமெரிக்கா மற்றும் கனடா குடியுரிமை பெற்றவர்களின் குடும்பங்களின் இருவேறு வீடுகள் உடைக்கப்பட்டு அங்கிருந்த பொருள்கள் திருடப்பட்ட நிலையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த வீடுகளுக்கு அண்மையில் உள்ள வீட்டில் வசிப்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார். அந்த வீடுகளில் திருடப்பட்ட 9 லட்சத்து 45 ஆயிரம்...

வடக்கிலுள்ள தொழில் முயற்சியாளர்களுக்கான வேண்டுகோள்!

வடக்கிலுள்ள தொழில் முயற்சியாளர்கள் தற்போதுள்ள சூழ்நிலைக்கமைய தமது தொழில் முயற்சிகளை மாற்றியமைக்க முன்வர வேண்டுமென யாழ்ப்பாணம் தொழில்துறை மன்றத்தின் தலைவர் விக்னேஷ் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் கூறுகையில், “தற்போது உள்ள அசாதாரண சூழ்நிலையானது இலங்கையில் மட்டுமல்லாது ஏனைய நாடுகளிலும் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது....
Loading posts...

All posts loaded

No more posts