இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 7ஆக அதிகரிப்பு!

நாட்டில் ஒமிக்ரோன் திரிபுடனால் பாதிக்கப்பட்ட மேலும் 3 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார பிரிவு இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவிப்பு!

நாடளாவிய ரீதியில் இன்று (செவ்வாய்கிழமை) காலை 8 மணிமுதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 5 மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளில் நேற்றைய தினம் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அதன்படி, நுவரெலியா, மன்னார், திருகோணமலை, இரத்தினபுரி மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளில் நேற்று காலை முதல்...
Ad Widget

இலங்கையில் உடன் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திடீர் அதிகரிப்பு!

இலங்கையில் உடன் அமுலாகும் வகையில் பெற்றோல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒரு லீற்றல் ஒக்டைன் 92 வகையைச் சேர்ந்த பெற்றோலின் விலை 157 ரூபாவிலிருந்து 177 ரூபாவாக அதிகரித்துள்ளது. ஒரு லீற்றர் ஒக்டைன் 95 வகையைச் சேர்ந்த பெற்றோலின் விலை 184 ரூபாவிலிருந்து 207...

அதிவேகமாக நுரையீரலுக்குள் செல்லும் ஒமிக்ரோன் – டெல்டாவை விட 70 மடங்கு அதிக வேகத்தில் பரவக்கூடியது!

டெல்டா வகை கொரோனா வைரஸை விட ஒமிக்ரோன் வைரஸ் 70 மடங்கு அதிக வேகத்தில் பரவக்கூடியது என்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹொங் கொங் பல்கலைக்கழகத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்விலேயே இவ்வாறு உறுதி செய்யப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் முதல்முறையாக கண்டறியப்பட்ட ஒமிக்ரோன் வைரஸ் இலங்கை உள்ளடங்களாக பல்வேறு நாடுகளில் பரவி வருகின்றது. இதன்காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு...

இன்று முதல் புதிய எரிவாயு சிலிண்டர்கள் விற்பனை – தரத்தைப் பார்த்து வாங்குமாறு அறிவிப்பு!

சமையல் எரிவாயுவின் தரம் தொடர்பான தரவுகள் பொறிக்கப்பட்ட சிலிண்டர்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளன. அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள தொழிநுட்ப அமைச்சின் செயலாளர் ஜயந்த டி சில்வா இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளார். இதற்கமைய, தரநிர்ணய நிறுவனத்தின் தரத்திற்கு அமைய ப்ரொப்பன் அளவு 30 சதவீதமாகவும் பியூட்டேனின் அளவு 70 சதவீதமாகவும் கொண்ட...

புலிகள் அமைப்பை மீள் உருவாக்க முயற்சியா? : 15 இலங்கையர்கள் மீது இந்திய புலனாய்வு பிரிவு அதிரடி நடவடிக்கை

இந்தியாவிற்கு ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 15 இலங்கையர்கள் மீது தேசிய புலனாய்வுப் பிரிவு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுக்கு புத்துயிரூட்ட முயற்சித்ததாகவும், இலங்கைக்கு எதிராக போரில் ஈடுபட்டதாகவும் கூறியே இவர்கள் மீது இந்திய தேசிய புலனாய்வு பிரிவு குற்றம் சுமத்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களில்...

நாட்டில் மேலும் 4 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம்!!

கொவிட்-19 மாறுபாடான ஒமிக்ரோன் தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் நான்கு நோயாளர்கள் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவ பிரிவின் பணிப்பாளரும் வைத்திய நிபுணருமான சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

டிசம்பர் மாத இறுதி வரைக்கான சுகாதார வழிகாட்டி!!

கொவிட் தொற்றுக் காரணமாக நடைமுறைப்படுத்தியிருக்கும் சுகாதார வழிமுறைகள் மேலும் 15 தினங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி அமுலில் உள்ள சுகாதார வழிமுறைகளில் மாற்றம் மேற்கொள்ளாது, டிசம்பர் மாத இறுதி வரை தொடர்வதற்கு தீர்மானித்திருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார். நேற்று (15) நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார். தற்போது நடைமுறையில்...

யாழ்ப்பாணத்தில் கோவிட்-19 நோய்த்தொற்றினால் 3 பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – அராலி வீதியில் வசந்தபுரத்தைச் சேர்ந்த கண்ணன் பத்மலோஜினி (வயது-38) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். “6 நாள்களாக காய்ச்சல் இருந்துள்ளது. அவர் தனியார் கிளினிக்கில் மருத்துவ ஆலோசனையுடன் மாத்திரைகளைப் பெற்றுள்ளார். அவர் நேற்று முன்தினம் மூச்சுத் திணறலுக்குள்ளான நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் நேற்று முன்தினம் முற்பகல் 10.30 மணிக்கு சேர்க்கப்பட்டார். எனினும் குடும்பப்பெண்...

யாழில் விரிவுரையாளர் வீட்டில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியது- மனைவி காயம்

துன்னாலை பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியதினால், விரிவுரையாளரின் மனைவி சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றும் அ.பௌநந்தி வீட்டிலையே இந்தச் சம்பவம் நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வழமை போன்று நேற்று காலை, விரிவுரையாளரின் மனைவி உணவு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தபோது,எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியதுள்ளது. இதன்போது வெடித்து சிதறிய...

இலங்கையில் சுமார் 60 கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் 89 சிறுவர்கள் கொரோனாவால் உயிரிழப்பு!

இலங்கையில் இதுவரை சுமார் 60 கர்ப்பிணித் தாய்மார்களும் 18 வயதுக்கு உட்பட்ட 89 குழந்தைகளும் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இந்த விடயம் தொடர்பாக குடும்ப நலப் பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் சித்தராமலி டி சில்வா தெரிவித்தார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், கர்ப்பிணித் தாய்மார்களின் மரணங்கள் அனைத்தும்...

அரச ஊழியர்களின் ஆட்சேர்ப்பிற்கு இடமளிக்க முடியாது – அரசாங்கம் திட்டவட்டம்!

வாகன இறக்குமதிக்கு அடுத்த வருடத்திலும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில் நடைபெற்ற பால் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன், அரச ஊழியர் ஆட்சேர்ப்பிற்கும் இடமளிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 28 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்காரணமாக நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 533ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 757 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி கொரோனா...

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான முழுமையான விபரம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 748 பேர் நேற்று (செவ்வாய்க்கிழமை) அடையாளம் காணப்பட்டனர். இதன்படி கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 67 ஆயிரத்து 697 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கிடையில் நேற்று கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 21 பேர்...

‘ஜனவரியில் கோவிட்-19 புதிய அலை உருவாகும் அபாயம்’!!

பண்டிகைக் காலங்களில் கோவிட்-19 வைரஸ் பரவும் அபாயத்தை கவனத்தில் கொள்ளாவிட்டால், எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் வைரஸ் வேகமாகப் பரவுவதைக் காண முடியும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொள்ளும் போதும் முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுவது அவசியமானது என அதன் செயலாளர், மருத்துவர் செனல் பெர்னாண்டோ...

இரண்டு வாரங்களுக்கு முடக்கப்படுகின்றது நாடு?

இம்மாத நடுப்பகுதியில் இரண்டுவாரகால முடக்கமொன்றை அமுல்படுத்த அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பண்டிகைக் காலங்களில் மக்கள் பொறுப்பற்ற வகையில் நடந்துகொள்ளலாம் என்பதால் இதுகுறித்து அரசாங்கம் தற்போது கவனம் செலுத்தியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் 23ஆம் திகதி முதல் ஜனவரி முதல் வாரம் வரை நாட்டை சுகாதார கட்டுப்பாடுகளுடன் முடக்க...

இலங்கைக்குள்ளும் நுழைந்தது ஒமிக்ரோன் – முதல் நபர் அடையாளம்!

இலங்கையிலும் கொரோனா வைரஸின் புதிய திரிபான ஒமிக்ரோன் தொற்றுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. தென் ஆபிரிக்காவிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர் ஒருவருக்கே ஒமிக்ரோன் தொற்றுள்ளமை பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. இதனை சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் பரவலைத் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதால் மக்கள் அச்சப்பட...

அடுத்தடுத்து வெடித்துச் சிதறும் சிலிண்டர்கள் – சமையல் எரிவாயு விநியோகத்திற்கு தடை!

நாடுமுழுவதும் சமையல் எரிவாயு கொள்கலன் விநியோகம் மற்றும் விற்பனை என்பனவற்றை இடைநிறுத்தியுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கமைய இன்று (3) காலை முதல் மறு அறிவித்தல்வரை இதனை அமுல்படுத்தியுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. எரிவாயுவின் தரம் குறித்து தெளிவான உறுதிப்படுத்தல் கிடைக்கும் வரையில், இந்தத் தீர்மானம் அமுலில் இருக்கும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேநேரம்,...

தலைமன்னாரில் பாடசாலை ஒன்றில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது!

மன்னார் – தலைமன்னார் துறை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் 12 மாணவர்கள் உட்பட 15 பேருக்கு நேற்றையதினம் மாலை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். தலைமன்னார் வைத்தியசாலையில் பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளடங்களாக 50...

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமையநேற்று (புதன்கிழமை) கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 744 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 564,733 ஆக அதிகரித்துள்ளது.
Loading posts...

All posts loaded

No more posts