- Tuesday
- August 26th, 2025

நாட்டில் ஒரு மணித்தியால மின்துண்டிப்பை அமுலாக்கும் நடவடிக்கை நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளது. அதற்கமைய, மாலை 5.30 தொடக்கம் இரவு 9.30 வரையான காலப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரத்திற்கு இனிவரும் நட்களிலும் மின் துண்டிப்பு ஏற்படுமென அந்த அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் மின்சாரம் துண்டிக்கப்படக்கூடிய நேரம் மற்றும் இடங்கள் தொடர்பான...

நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு மணிநேர மின்வெட்டு அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாடுமுழுவதும் நான்கு வலயங்களாகப் பிரிக்கப்பட்டு மாலை 5:30 மணி முதல் இரவு 9:30 மணி வரை ஒரு மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மின்வெட்டு அட்டவணையைப் பார்க்க கீழுள்ள இணைப்பை கிளிக் செய்க. power cut schedule

அரசாங்கத்திற்கு எதிரான பொதுமக்களின் அதிருப்தி தீவிரமடைவதால் இந்த அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் எழுச்சிக்கு தலைமை வழங்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவுள்ளதென அக்கட்சித் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்று (09) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய மக்கள் சக்தியின்...

யாழ்ப்பாண நகர எல்லைக்குள் ´எனோபீலிஸ் டிபென்ஸி´ எனப்படுகின்ற புதிய வகை மலேரியா நுளம்பு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இது மிகவும் அனர்த்த நிலை என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் ஏ. கேதீஷ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தென்ஆபிரிக்காவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு...

யாழ்ப்பாணம், ஆரியகுளத்தில் பொதுமக்களின் சமய உரிமையை மீறும் வகையில் செயற்படும் அதிகாரம் மாநகர சபைக்குக் கிடையாது என சாரப்பட – மாநகர சபையை அச்சுறுத்தும் பாணியில் யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளருக்கு வடக்கு மாகாண ஆளுநர் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். யாழ். மாநகர முதல்வரின் ஏற்பாட்டில் தனியார் நிதிப் பங்களிப்புடன் ஆரியகுளம் அழகுபடுத்தப்பட்டு, பொழுதுபோக்குத்...

பொது இடங்களில் நடமாடுபவர்கள் கொரோனா தடுப்பூசி அட்டைகளை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்பது குறித்த சட்ட தயாரிப்பு பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த விடயம் தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை பூஸ்டர் எனப்படும் செயலூக்கி தடுப்பூசியை அனைவரும்...

நெடுந்தீவு – குறிகட்டுவான் இடையிலான கடற்போக்குவரத்து சேவை இடம்பெற்றபோது பாரிய அசம்பாவிதம் மயிரிழையில் தவிர்க்கப்பட்டது. இன்று (புதன்கிழமை) காலை 100ற்கு மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்ட பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் சமுத்திர தேவி படகு இடை நடுவில் பழுதடைந்த நிலையில் பின்னர் வடதாரகைப் படகின் உதவியுடன் குறிகட்டுவான் நோக்கி இழுத்து செல்லப்பட்டது. சுக்கான தடி உடைந்தமையினால் இடைநடுவில்...

இலங்கையில் கொரோனா வைரஸின் ஒமிக்ரோன் மாறுபாடு சமூகப் பரவலடைய ஆரம்பித்துள்ளது என சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். எதிர்காலத்தில் இலங்கையில் ஆதிக்கம் செலுத்திகக்கூடிய கொரோனா தொற்றின் மாறுபாடாக இது மாற்றமடையலாம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் விசேட வைத்திய நிபுணர் நதீகா ஜனகே இதனை...

அரச ஊழியர்களுக்கு 5,000 ரூபா மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். ஜனவரி மாதம் முதல் சமுர்த்தி பெறுவோரின் 3,500 மாதாந்த கொடுப்பனவுக்கு 1000 ரூபாய் மேலதிக கொடுப்பனவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மயிலிட்டி பகுதியில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக இன்று போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது. வலி.வடக்கு மீனவர் சமாசம் மற்றும் மயிலிட்டி கடற்றொழிலாளர் சங்கங்களின் ஏற்பாட்டில் இன்று காலை 10 மணியளவில் மயிலிட்டி துறைமுகத்தில் ஒன்றுகூடிய மீனவர்கள் இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துமீறுகின்ற இந்திய மீனவர்களை கைது செய், கைது செய்கின்ற படகுகளை அரசுடைமையாக்கு...

இலங்கையில் மேலும் 41 ஒமிக்ரோன் வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஸ்ரீஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறை பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர இதனை தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 45 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்பரப்பிரனை அண்மித்த பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இலங்கையின் கிழக்கு கடற்கரையிலிருந்து 300 கிலோமீற்றர் தொலைவில் கடலுக்கடியில் குறித்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகத்தின் தலைவர் அனுர வல்பொல தெரிவித்துள்ளார். இதன் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கல்முனை கார்மேல் பாத்திமா தேசிய பாடசாலை மாணவர் ஒருவர் தற்போதைய காலகட்டத்துக்கு மிகவும் அவசியமான உபகரணம் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். தற்போது நாட்டில் பல பாகங்களிலும் எரிவாயு சிலிண்டர் வெடிப்புச் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்த வண்ணமே இருக்கின்றன. இதனால் மக்களின் உயிர் மற்றும் பொருள் சேதங்களுக்குள்ளாகி வருகின்றன. இதற்குத் தீர்வாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள கமு/கமு கார்மேல்...

பொருட்களின் விலை அதிகரிப்பை இந்த தருணத்தில் கட்டுப்படுத்துவது கடினம் என அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். எனவே, பொதுமக்கள் தங்கள் வீடுகளில் எதனையாவது பயிர்செய்யவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். உலகசந்தையிலும் உள்நாட்டிலும் பொருட்களிற்கு தட்டுப்பாடு காணப்படுவதால் பொருட்களின் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவது கடினம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் காரணமாக அரசாங்கம் சந்தையில் தலையிட்டு...

கொரோனா வைரஸின் பதிய மாறுபாடான ஒமிக்ரோன் தொற்றின் அலை எதிர்காலத்தில் நாட்டில் காணப்படலாம் என சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். ஊடகங்களுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கருத்து வெளியிட்ட இலங்கை குடும்ப வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் மல்காந்தி கல்ஹேன, இவ்வாறான அலைக்கு முகம் கொடுப்பதற்கும் அதனைத் தவிர்ப்பதற்கும் மக்கள் தங்களைத் தாங்களே முன்னிறுத்துவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது...

நாட்டில் ஒமிக்ரோன் திரிபுடனால் பாதிக்கப்பட்ட மேலும் 3 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார பிரிவு இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் இன்று (செவ்வாய்கிழமை) காலை 8 மணிமுதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 5 மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளில் நேற்றைய தினம் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அதன்படி, நுவரெலியா, மன்னார், திருகோணமலை, இரத்தினபுரி மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளில் நேற்று காலை முதல்...

இலங்கையில் உடன் அமுலாகும் வகையில் பெற்றோல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒரு லீற்றல் ஒக்டைன் 92 வகையைச் சேர்ந்த பெற்றோலின் விலை 157 ரூபாவிலிருந்து 177 ரூபாவாக அதிகரித்துள்ளது. ஒரு லீற்றர் ஒக்டைன் 95 வகையைச் சேர்ந்த பெற்றோலின் விலை 184 ரூபாவிலிருந்து 207...

டெல்டா வகை கொரோனா வைரஸை விட ஒமிக்ரோன் வைரஸ் 70 மடங்கு அதிக வேகத்தில் பரவக்கூடியது என்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹொங் கொங் பல்கலைக்கழகத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்விலேயே இவ்வாறு உறுதி செய்யப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் முதல்முறையாக கண்டறியப்பட்ட ஒமிக்ரோன் வைரஸ் இலங்கை உள்ளடங்களாக பல்வேறு நாடுகளில் பரவி வருகின்றது. இதன்காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு...

சமையல் எரிவாயுவின் தரம் தொடர்பான தரவுகள் பொறிக்கப்பட்ட சிலிண்டர்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளன. அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள தொழிநுட்ப அமைச்சின் செயலாளர் ஜயந்த டி சில்வா இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளார். இதற்கமைய, தரநிர்ணய நிறுவனத்தின் தரத்திற்கு அமைய ப்ரொப்பன் அளவு 30 சதவீதமாகவும் பியூட்டேனின் அளவு 70 சதவீதமாகவும் கொண்ட...

All posts loaded
No more posts