Ad Widget

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினருக்கு அங்கஜன் சவால்!

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தனது தேர்தல் பிரச்சாரப் பணிக்காக இராணுவத்தினர் ஈடுபடுத்தப்படுவதை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் உறுதிப்படுத்தினால் தான் தேர்தலில் இருந்து விலகுவதற்கு தயாராக இருப்பதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். அத்தோடு குறித்த விடையத்தை நிரூபிக்க தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தவறினால் தேர்தலில்...

யாழ். மாவட்ட வாக்காளர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

தேசிய அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள் தமக்குரிய தேசிய அடையாள அட்டை விண்ணப்பத்தினை கிராம சேவையாளரூடாக உடனடியாக விண்ணப்பிக்குமாறு யாழ். மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் இ.அமல்ராஜ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் கடமையாற்றும் கிராம உத்தியோகத்தர்களுக்கு தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக விளக்கமளிக்கும் கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது. இதன்பின்னர் கருத்துத் தெரிவிக்கும் போது அவர் மேற்கண்ட...
Ad Widget

ஆயுதம் ஏந்திப் போராடி மக்களின் உரிமைகளை வென்று தருவதாக நான் உறுதியளிக்கப்போவதில்லை – சுமந்திரன்

ஆயுதம் ஏந்திப் போராடி தமிழ் மக்களின் உரிமைகளை வென்று தருவேன் என வாக்குத் தரவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கருத்து தெரிவித்த அவர், அஹிம்சை வழியில், இராஜதந்திரமாக, பேச்சுவார்த்தை மூலம் எவை எல்லாவற்றையும் பெறமுடியுமோ அவை எல்லாவற்றையும் பெற அயராது உழைப்பதாகவும் அவர்...

முன்னுதாரணமாக நடந்து கொண்ட சட்டத்தரணி மணிவண்ணனுக்கு மக்கள் பாராட்டு!!

பாடசாலை மதிலில் தனது இலக்கத்தையும் கட்சி சின்னத்தையும் கீறியதற்கு மனவருத்தம் தெரிவித்து மதிலுக்கு, புதிதாக சுவர் பூச்சு பூசி கொடுத்துள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட வேட்பாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன். தாவடி பகுதியில் உள்ள பாடசாலை மதிலில் வி. மணிவண்ணனின் பெயர் பெரிதளவில் வெள்ளை வர்ணத்தில் எழுதி, அருகில் கட்சி சின்னமும்,...

இனவாதம் என்பது ஒரு விசக்கிருமி ஆகும் – சஜித்

இனவாதம் என்பது ஒரு விசக்கிருமி ஆகும் என முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். மன்னாரில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது எனது வெற்றிக்காக முன்னாள் அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன், ரவூப்...

தேர்தல் பிரசாரங்களில் எனது ஒளிப்படத்தை பயன்படுத்தக் கூடாது – ஜனாதிபதி உத்தரவு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக தனது ஒளிப்படத்தை பயன்படுத்தக்கூடாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்தோடு, பாதுகாப்பு சேவைகள், பொது நிர்வாகம், அரச சேவைகள், கூட்டுத்தாபனங்கள், சபைகள் மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்களில் சேவையில் ஈடுபட்டுள்ள அரச ஊழியர்கள் எவரும் அரசியல் பணிகளில் ஈடுபடக் கூடாதென்றும் ஜனாதிபதி பணித்துள்ளார். இம்முறை...

யாழ். மாவட்டத்தில் தேர்தல் தொடர்பில் 24 முறைப்பாடுகள் பதிவு!

பொதுத் தேர்தல் தொடர்பாக இதுவரை 24 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக, யாழ்ப்பாண மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் இ.அமல்ராஜ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வேட்பாளர்களின் பதாதைகளை அகற்றும் நடவடிக்கைகள், பிரதேச செயலக ரீதியில், பொலிஸாரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது எனவும் தெரிவித்தார் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்காக...

வடக்கில் தேர்தல் பிரசாரங்களை ஆரம்பிக்கும் சஜித்!!

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச வடக்கில் தனது தேர்தல் பிரசாரங்களை ஆரம்பிக்கவுள்ளார். அதற்கமைய இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சியில் முகாமிட்டு தொடர் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார். சாவகச்சேரியில் இன்று பிற்பகல் 2 மணிக்கு முதலாவது பிரசாரக் கூட்டம் இடம்பெறவுள்ளது. அதன் பின்னர் யாழ். இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி, கோப்பாய் செல்வமஹால்...

அரசாங்கத்தை எதிர்ப்பதற்கு கூட்டமைப்பு தயாரில்லை – சிறிக்காந்தா

தமிழ் மக்கள் சார்பில் அரசுடன் எதிர்த்துப் போராடுவதற்கு தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக இல்லை என தமிழ் தேசிய கட்சியின் தலைவர் என். சிறிக்காந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே என்.சிறிக்காந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடந்து கருத்து தெரிவித்த அவர், ”கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது கோட்டிபய...

யாழில் தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பில் 15 முறைப்பாடுகள்!!

யாழ்ப்பாணத்தில் தேர்தல் அறிவிக்கப்படத்திலிருந்து இன்றுவரை ஒரு தேர்தல் வன்முறை சம்பவம் உட்பட 15 தேர்தல் விதிமுறை மீறல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் கி.அமலராஜ் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டதான் பின்னர் இன்றுவரை 15 தேர்தல்...

40 ஆயிரம் மாவீரர்களின் 40 ஆண்டுகள் கனவு வீண்போகக் கூடாது என்ற ஒற்றைக் காரணத்துக்காக நாம் அரசியலுக்குள் வந்தோம் – மணிவண்ணன்

40 ஆயிரம் மாவீரர்கள் 40 ஆண்டுகளாக சுமந்த கனவு வீண்போகக் கூடாது என்ற ஒற்றைக் காரணத்துக்காக எங்களுடைய வாழ்வை அரசியலுக்குள் அர்ப்பணித்தவர்கள்தான் நாங்கள் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட வேட்பாளருமான சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார். “சலுகைகளை அனுபவிக்கவேண்டும் என்ற காரணத்துக்காக நாம் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வரவில்லை....

தபால்மூலமான வாக்களிப்பு திகதி அறிவிக்கப்பட்டது!!

2020 பொதுத் தேர்தலுக்கான தபால்மூலமான வாக்களிப்பு திகதியை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தபால் மூலமான வாக்களிப்பு ஜூலை 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நடைபெறுகிறது. மேலும் ஜூலை 16 மற்றும் 17 திகதிகளில் மதியம் 12 மணி வரை மாவட்ட செயலாளர்கள், முப்படையினர், பொலிஸார் மற்றும் சுகாதார அதிகாரிகள் வாக்களிக்க முடியும். குறித்த...

பிரிந்து நின்று எதையும் சாதிக்க முடியாது: வாக்குறுதிகளை நிறைவேற்ற எதையும் செய்வோம்- சுமந்திரன்

வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழர்களின் பெரும்பான்மை பலத்தைப் பெற்ற ஒரே ஒரு கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பு மாத்திரமே எனவும் தமிழ் மக்கள் பிரிந்து நின்றால் எதையும் சாதிக்க முடியாது என்றும் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அத்துடன், 2015 ஆம் ஆண்டு புதிய அரசாங்கத்துடன் சேர்ந்து பயணித்தபோதும் அரசாங்கத்தோடு சேரவில்லை என்று தெரிவித்துள்ள...

தேர்தல் வியூகம் எப்படி அமைப்பது?- யாழில் கூடி ஆராய்ந்தது முன்னணி

தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் யாழ். தேர்தல் மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றது. யாழ்ப்பாணம், இளம் கலைஞர் மன்ற மண்டபத்தில் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாகவும் அதற்கான பரப்புரைகள் குறித்தும்...

யாழ்ப்பாணம், கம்பஹா மாவட்டங்களின் வாக்குச்சீட்டு மிக நீளமானது

யாழ்ப்பாணம் மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கு அச்சிடப்படவேண்டிய வாக்குச்சீட்டுகள் மிக நீண்டதாக ( 23″) அமையும் என்று தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. அத்துடன், வன்னி, மட்டக்களப்பு, கொழும்பு மற்றும் திகாமடுல்ல மாவட்டங்களுக்கு அச்சிடப்படவேண்டிய வாக்குச்சீட்டுகள் அகலமாக (9″) அமையும் என்றும் செயலகம் குறிப்பிட்டுள்ளது. 18 உறுப்பினர்களைத் தெரிவுசெய்யும் கம்பஹா மாவட்டத்துக்கும் 7 உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் யாழ்ப்பாணம்...

தபால் மூல வாக்களிப்பு திகதி குறித்த அறிவிப்பு வெளியீடு

பொது தேர்தலில் தபால் மூல வாக்களிப்பு திகதி குறித்த அறிவிப்பினை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அதற்கமைய ஜூலை மாதம் 13, 14, 15 மற்றும் 16ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று அறிவித்திருந்தமை...

ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி பொதுத்தேர்தல்!! வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியது

2020 பொதுத்தேர்தலை நடாத்துவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ள நிலையில் வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது

எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய இன்றைய தினம் வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய துரிதமாக பொதுத் தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தயார்

சுகாதாரத்துறை சார்ந்த மேலதிகாரிகளின் வழிகாட்டல்களுக்கு அமைய, விரைவில் பொதுத் தேர்தலை நடத்தத் தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்பார்ப்பதாக அதன் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தலை தொடர்ந்து பின்போடும் நோக்கம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்குக் கிடையாது. எனினும், சுகாதார நிலைமைகள் சீரடைந்து, சட்ட ரீதியான முட்டுக்கட்டைகள் இல்லாதிருப்பின் தேர்தலை கூடிய விரைவில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என திரு...

ஜூன் 20 இல் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியம் இல்லை – தேர்தல்கள் ஆணைக்குழு!

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியம் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் மூன்றாவது நாளாக இன்றும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதன்போது தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு சார்பாக...
Loading posts...

All posts loaded

No more posts