- Thursday
- October 30th, 2025
எதிர்வரும் மே 6 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கு, அடையாளச் சான்று உறுதிப்படுத்தும் அங்கீகரிக்கப்பட்ட ஆவணத்தை எடுத்துச் செல்வது கட்டாயம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் சாரதி அனுமதி பத்திரம், கடவுச்சீட்டு மற்றும் தற்காலிக அடையாள அட்டை ஆகியவற்றை...
அரசே சட்டவிரோதமான மீன்பிடித் தொழிலை கட்டுப்படுத்தி நீரியல் வளங்களைப் பாதுகாப்பவர்களை அச்சுறுத்தும் சமூக விரோதிகளை கட்டுப்படுத்த கோரி முல்லைத்தீவு மீனவர்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாகவும் அதனை கட்டுப்படுத்துமாறு கோரி மீனவர்கள் தொடர்ச்சியாக கோரிவந்த நிலையில் அண்மைக் காலமாக கடலிலும் நந்திக் கடல்...
பருத்தித்துறை - தும்பளை பிரதேசத்தில் வீடொன்றுக்குள் பலத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். தும்பளை பிரதேசத்தைச் சேர்ந்த 69 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேற்படி பெண் வீட்டில் இருந்த வேளையில், வீட்டை கொள்ளையிடும் நோக்கில் வந்த நபரொருவர் பெண்ணை பொல்லால் கடுமையாக தாக்கி கொலை செய்துள்ளதாக...
எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு நேற்று(20) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 24, 25, 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் மாத்திரமே தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெறும் என தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள அனைத்து அரச மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளிலும் 2025 ஆம் கல்வியாண்டுக்கான முதலாம் தவணையின் மூன்றாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று (21) ஆரம்பமாகியுள்ளன. கல்வி அமைச்சின் தகவலின்படி, 2025 ஆம் கல்வியாண்டின் முதலாம் தவணையானது எதிர்வரும் மே 09 ஆம் திகதியுடன் நிறைவு பெறும். அதையடுத்து, 2025 ஆம்...
ஏப்ரல் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிப்பது குறித்து இன்னும் எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளவில்லை என பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார் நாடாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்று நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அதன்படி 18ஆம் திகதியும் பெரிய...
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருகைதந்த இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளரும், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருமான சனத் ஜயசூரி, யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் ஆகியோர் இணைந்து யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான கலந்துரையாடலில் ஈடுப்பட்டதோடு, கள விஜயத்திலும்...
உரிமையாளரால் மேச்சலுக்காக கட்டவிழ்த்து விடப்பட்ட பசு மாடு ஒன்று வேலணை பிரதேச சபை வளாகத்துக்குள் நுழைந்து தாவரங்களை தின்று சேதமாக்கியதால் குறித்த பசுமாட்டை பிரதேச சபையினர் சட்ட ரீதியாக பிடித்து கட்டிவைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலணை நகர்ப்பகுதியில் கால்நடை பண்ணை நடத்திவரும் பெண் உரிமையாளர் ஒருவர் பிரதேச செயலக நுழைபாதையை வழிமறித்து போராட்டம் ஒன்றை நேற்று...
2025 ஆம் ஆண்டுக்கான அரச பாடசாலைகளின் கல்விக் காலத்தின் முடிவு மற்றும் தொடக்கத்தை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி அமைச்சின் கூற்றுப்படி, முதலாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் ஏப்ரல் 11 (வெள்ளிக்கிழமை) அன்று முடிவடையும். மேலும், முதலாம் பாடசாலை தவணையின் மூன்றாம் கட்டம் ஏப்ரல் 21 ஆம் திகதி தொடங்கி 2025 மே...
நாடாளுமன்றத்தில் இன்று தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை, காணாமல் ஆக்கப்பட்டோரது விவகாரம், அரசியல் கைதிகளின் விடுதலை, புதிய அரசியலமைப்பு உள்ளிட்ட பல விடயங்களை முன்வைத்து, இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கேள்விகளை முன்வைத்திருந்தார். குறிப்பாக ”யுத்தம் முடிவடைந்து 16 வருடங்கள் கடந்துவிட்ட போதும் , இம் மோதலுக்கான மூலக்காரணம் இன்னமும் தீர்க்கப்படவில்லை...
இராணுவத்தின் அதி உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்த யாழ்ப்பாணம் - அச்சுவேலியிலிருந்து பருத்தித்துறை கடற்கரை நோக்கி செல்லும் வீதியானது வியாழக்கிழமை (10) காலை 6.00 மணியளவில் முழுமையாக திறந்து வைக்கப்பட்டது. இவ் வீதியானது பலாலி அதி உயர் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ளது இராணுவக் குடியிருப்பினூடாக செல்லும் வீதியாகும். பல நிபந்தனைகளின் அடிப்படையிலேயே இவ் வீதி திறந்துவைக்கப்பட்டுள்ளது. ஒரு...
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு (08) மட்டக்களப்பில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. நபர் ஒருவரை கடத்தியமை மற்றும் அவரை காணாமல் ஆக்கியமை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID)...
2025 ஆம் ஆண்டு வரவு- செலவுத்திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு இணையாக தனியார் துறையின் ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கிணங்க, கீழ்க்காணும் வகையில், தேசிய குறைந்தபட்ச மாதாந்தச் சம்பளம் மற்றும் தேசிய குறைந்தபட்ச நாளாந்த சம்பளத்தை திருத்தம் செய்வதற்கும், அதற்குரிய ஏனைய சட்ட ரீதியான நடவடிக்கைகளைக் கடைப்பிடிப்பதற்கு, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...
18,853 பட்டதாரிகள், இளைஞர்களை அரசு சேவையில் இணைத்துக் கொள்வதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமரின் செயலாளர் தலைமையிலான குழு வழங்கிய பரிந்துரையைத் தொடர்ந்து, இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரச துறையில் உள்ள வெற்றிடங்களைக் கருத்தில் கொண்டு, எந்தவொரு அரசியல் தலையீடும் இல்லாமல் ஆட்சேர்ப்பு நடைபெறும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர்...
இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது ரிக்டர் அளவுகோலில் 5.7ஆக பதிவாகியுள்ளது. வடக்கு சுமத்ராவில் நள்ளிரவு 1.19 மணிக்கு பூமிக்கு அடியில் 37 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரிக்டர் அளவில் 5.7 என்ற அளவு மிதமான சக்தி வாய்ந்த நிலநடுக்கமாக கருதப்பட்டாலும், அடர்ந்த மக்கள்...
வடமராட்சி நித்தியவெட்டை பகுதியில் பருத்தித்துறை மதுவரித்திணைக்கள அதிகாரிகள் மூர்க்கத்தனமாக தாக்கியதாக சீவல் தொழிலாளி ஒருவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளார். சம்பவம் தொடர்பாக ஊடகங்களுக்கு குறித்த நபர் கருத்து தெரிவிக்கையில், கடந்த 04.04.2025 அன்று பிற்பகல் 3.30 மணியளவில் கள் இறக்குவதற்காக எனது பகுதிக்கு சென்றிருந்தேன்.திடீரென அங்கு சிவில் உடையில் வந்த பருத்தித்துறை மதுவரி திணைக்கள அதிகாரிகள்...
இலங்கை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா, டிக்டொக் செயலி குறித்து தனது கருத்துக்களைப் பகிர்ந்து, புலம்பெயர் தமிழ் சமூகத்துடனான தொடர்பை மேம்படுத்துவதற்கான புதிய திட்டத்தை அறிவித்துள்ளார். தனது பேஸ்புத் பக்கத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தனது அறிக்கையில், "டிக்டொக் இதுவரை ஒரு பெரிய தலைவலியாகவே இருந்து வந்திருக்கிறது. இதனால்...
யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவன் மீது தாக்குதல் மேற்கொண்டு சித்திரவதை புரிந்த குற்றச்சாட்டில் சிரேஷ்ட மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 27 ஆம் திகதி பல்கலைக்கழக விடுதியில் இருந்து பல்கலைக்கழகத்துக்கு நடந்து வந்து கொண்டிருந்த புதுமுக மாணவனை விரிவுரைக்குச் செல்லவிடாமல் தடுத்த சிரேஷ்ட மாணவர்கள் சிலர்,...
யாழ்ப்பாணத்தில் இடுகாடு ஒன்றினை தனியார் ஒருவர் கொள்வனவு செய்து, அதில் கட்டடங்களை கட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். சுழிபுரம் பகுதியில் உள்ள காணி ஒன்றை நீண்ட காலமாக அப்பகுதி மக்கள் இடுகாடாக பயன்படுத்தி வருகின்றனர். அங்கு சுமார் 150 இற்கும் மேற்பட்ட உடலங்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் பல கல்லறைகளும் கட்டப்பட்டுள்ளன. அத்துடன்...
வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்குமாறு சமூக செயற்பாட்டாளரான பொன்ராசா என்பவர் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடமும் அவர் முறைப்பாடு செய்துள்ளார். அரச உத்தியோகத்தரான அவர் அலுவலகப் பணி முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது வீதியில் நின்ற வட்டுக்கோட்டை பொலிஸார் தன்னை மறித்து...
Loading posts...
All posts loaded
No more posts
