விடுதலைப் புலிகளால் மறைத்து வைக்கப்பட்ட வெடிபொருட்களுடன் தொடர்புடைய மூவர் இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டு கைது!!

குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மூன்று இலங்கையர்கள், இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டனர். கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததும் அவர்கள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். இந்த நபர்கள் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர். இந்த மூவரும் சுமார் 15 நாட்களுக்கு முன்பு இலங்கையிலிருந்து படகு மூலம் தமிழ்நாட்டிற்கு...

அரச – தனியார் பேருந்து சேவையின் எதிர்காலம் குறித்து யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர்கள்கூட்டாக கள ஆய்வு!

யாழ். மாவடத்தில் சேவையில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் பேருந்து சேவையின் எதிர்கால திட்ட முன்மொழிவு குறித்தும் அதன் சவால்களை ஆராயும் முகமாகவும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அரச அதிகாரிகள் ஆகியோரது பிரசன்னத்துடன் கள விஜயம் ஒன்று நேற்று புதன்கிழமை (29) முன்னெடுக்கப்பட்டது. ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், யாழ் மாவட்ட பாராளுமன்ற...
Ad Widget

பலாலியில் காணி விடுவிப்பது குறித்து பாதுகாப்பு அமைச்சில் உயர்மட்ட கலந்துரையாடல்!!

பலாலிப் பிரதேசத்தில் உயர் பதுகாப்பு வலயத்தில் எஞ்சியுள்ள காணிகளை அவற்றின் தனிப்பட்ட காணி உரிமையாளர்களுக்கு துரிதமாகக் கையளிப்பது குறித்து பாதுகாப்பு அமைச்சில் உயர்மட்ட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. பிரதி பாதுகாப்பு அமைச்சர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தலைமையில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத்...

8,547 வெற்றிடங்களை நிரப்ப அரசாங்கம் முடிவு!

பொது சேவை ஆட்சேர்ப்பு செயல்முறைய மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட சிறப்புக் குழுவின் பரிந்துரைகளைத் தொடர்ந்து, பல அரசு அமைச்சகங்கள், மாகாண சபைகள் மற்றும் ஆணையங்களில் 8,547 பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமரின் செயலாளர் தலைமையிலான குழு, ஏற்கனவே உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கான தேவைகள், முன்னுரிமைகள் மற்றும் காலக்கெடுவை அடையாளம் கண்டு ஆட்சேர்ப்புகளை...

வடக்கில் GovPay வழியாக போக்குவரத்துக்கான அபராதம் செலுத்தும் முறை ஆரம்பம்!!

அரசாங்க டிஜிட்டல் கட்டணத்தளமான GovPay மூலம் வட மாகாணத்தில் போக்குவரத்திற்கான அபராதம் செலுத்தும் முறை நேற்று (28) கிளிநொச்சி மாவட்ட செயலக திறன்விருத்தி மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால கலந்துகொண்டு ஆரம்பித்துவைத்தார். இந்த நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வட மாகாணத்திற்குப்...

செம்மணிப் புதைகுழிக்கு நீதிகோரி போராட்டம்!!

செம்மணிப் புதைகுழிக்கு நீதிகோரி, யாழ்ப்பாணம் செம்மணி வளைவுக்கு அருகில் இன்று செவ்வாய்க்கிழமை (28) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இலங்கை மெதடிஸ்த திருச்சபை மற்றும் நீதிக்கும் சமாதானத்துக்குமான பணிக்குழு ஆகியவை இணைந்து முன்னெடுத்த போராட்டத்தில் மத தலைவர்கள் , பாதிக்கப்பட்ட மக்கள் கலந்து கொண்டு செம்மணி புதைகுழிக்கு நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழில் பிரபல வர்த்தகரின் மகன் கைது!!

யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல வர்த்தகர் ஒருவரின் மகன் ஒருவர் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இலக்கத் தகடு இன்றி பயணித்த சிற்றூந்து ஒன்றை சோதனைக்கு உட்படுத்திய போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து 11 கிராம் 600 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், சந்தேக நபர் கைது செய்யப்பட்ட போது...

யாழில் சட்டவிரோதமாக சொத்துக்களை சேகரித்த பலருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

யாழில் சட்டவிரோதமாக சொத்துக்களை சேகரித்த 11 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக் தனபால தெரிவித்துள்ளார். நேற்று (27) யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் காரியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும்...

ஜேர்மன் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில்!!

கிளிநொச்சி ஜேர்மன் தொழிற்பயிற்சி நிலையத்தின் உப அதிபர் இடம்மாற்றம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜேர்மன் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போதைய அதிபர் ஓய்வு வயதையும் தாண்டி கடமையாற்றுகின்ற நிலையில் துடிப்புடன் செயற்பட்ட உப அதிபர் இடம்மாற்றம் செய்யப்பட்டமையானது ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் என தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எனவே இந்த...

தலைமன்னார் – ராமேஸ்வரம் இடையே புதிய படகுப் பாதை குறித்து விவாதம்!

மும்பையில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டு இந்திய கடல்சார் வாரத்தின் போது, ​​அந்நாட்டு துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சர் சர்பானந்த சோனோவால், இலங்கை துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலகேவுடன் இருதரப்பு சந்திப்பை நடத்தினார். இதன்போது, ராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையே புதிய பாதையை தொடங்குவதன் மூலம் இந்தியா-இலங்கை...

“மொன்தா” சூறாவளி முல்லைத்தீவிலிருந்து 600 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளது !

மத்திய , சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் எனவும் வட மாகாணத்திலும் அத்துடன் அனுராதபுரம் மாவட்டத்திலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், மத்திய, சப்ரகமுவ, மேல், தென், வடமத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மற்றும்...

உலகின் சிறந்த சுற்றுலா தளங்களுக்குள் யாழ்ப்பாணம்

உலகளாவிய பயண வெளியீடான லோன்லி பிளானட் (Lonely Planet),2026 ஆம் ஆண்டிற்கான உலகில் பார்வையிட சிறந்த 25 இடங்களில் ஒன்றாக யாழ்ப்பாணத்தை பெயரிட்டுள்ளது. இலங்கையின் செழுமையான கலாச்சார மற்றும் வரலாற்றுப் பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு யாழ்ப்பாணம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சுற்றுலா மேம்பாட்டு உத்தியின் ஒரு பகுதியாகப் பிராந்தியப் பன்முகத்தன்மையை ஊக்குவிப்பதற்கான நாட்டின் தொடர்ச்சியான முயற்சிகளையும் இது வெளிப்படுத்துகிறது....

குமாரப்பா புலேந்திரன் உள்ளிட்டவர்களின் நினைவுத் தூபியை அமைப்பதற்கு நடவடிக்கை !!

சாவகச்சேரியில் வீதியோரத்தில் இருந்த நிலையில் இடித்தழிக்கப்பட்ட குமாரப்பா புலேந்திரன் உள்ளிட்டவர்களின் நினைவுத்தூபியை மீளவும் புனரமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் ஞா.கிஷோர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், வீதியில் இருந்து 4 அடிகள் தூரத்திலும், தனியார் காணியின் எல்லைக்கு வெளியே குமாரப்பா புலேந்திரன் உள்ளிட்டவர்களின் நினைவுத்தூபி இருந்தது. தனது...

இஷாரா செவ்வந்திக்கு உதவிய “ஆனந்தனின்” வீட்டிலிருந்து ஆயுதங்கள் கைப்பற்றல்!

“கணேமுல்ல சஞ்சீவ” படுகொலையுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்திக்கு இந்தியாவுக்கு தப்பிச் செல்ல படகு ஏற்பாடு செய்துகொடுத்து உதவியமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள “ஆனந்தன்” என்பவரின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர். பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள “ஆனந்தன்” என்பவர் வழங்கிய தகவலுக்கமைய...

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை பயணிகள் படகுச் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்

இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள நாகப்பட்டினத்திற்கும், காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் படகுச் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. கடற்பகுதியில் நிலவும் மோசமான வானிலை காரணமாகவே ஞாயிற்றுக்கிழமை (26) முதல் சேவை இடைநிறுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது. படகுச் சேவை வழங்குநர் நிறுவனம், மோசமான வானிலை முன்னறிவிப்பைக் காரணம் காட்டி, நேற்று முதல் நாளை செவ்வாய்கிழமை வரையிலான பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக...

ஐஸ் போதைப் பொருளுடன் யாழ்.மாநகர சபை உறுப்பினரின் மகனை தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி!!

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் சிறிய ரக கத்தியுடன் கைதான இளைஞனை 24 மணித்தியாலங்கள் பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுக்க யாழ் . நீதவான் நீதிமன்று அனுமதித்துள்ளது. நல்லூர் அரசடி பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரை ஐஸ் மற்றும் சிறிய ரக கத்தியுடன் யாழ்ப்பாண பொலிஸார் நேற்றைய தினம் வியாழக்கிழமை அதிகாலை கைது...

இஷாரா செவ்வந்தி தப்பிச் செல்ல பயன்படுத்தப்பட்ட படகு கண்டுபிடிப்பு!

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் பிரதான சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி இந்தியாவுக்குத் தப்பிச் செல்லப் பயன்படுத்தியதாக நம்பப்படும் ஒரு படகினை கண்டுபிடித்துள்ளதாக கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணப் பகுதியில் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு நடவடிக்கையின் போது இந்த படகு கண்டுபிடிக்கப்பட்டது. இந்தப் படகு, பிரியங்கா என்று அழைக்கப்படுகிறது, மேலும் இது 400...

வடக்கு,கிழக்கில் போதைப்பொருள் பாவனை தீவிரம்: இராணுவத்துக்கு பெரும் பங்குண்டு – கஜேந்திரகுமார்

வடக்கு மற்றும் கிழக்கில் போதைப்பொருள் விநியோகித்தில் இராணுவத்திற்கு மிகப்பெரிய பங்குள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புரட்சியை தோற்கடிப்பதற்காக இராணுவத்தினரால் வடக்கு,கிழக்கில் பரப்பப்பட்ட போதைப்பொருள் புற்றுநோய் இன்று தெற்கிலும் வியாபித்துள்ளது. போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமானால் இராணுவத்தினரை இது தொடர்பான நடவடிக்கையில் இருந்து முற்று முழுதாக நீக்கி விடுங்கள் என தமிழ்த் தேசிய...

பல்கலை பதிவாளர் பொறுப்பற்ற நடவடிக்கை -பல்கலைக்கழக ஊழியர் சங்கம் தொழிற்சங்க போராட்டம்!!

யாழ் பல்கலையின் பதிவாளரது திட்டமிட்டு செயற்படுத்தப்படும் பொறுப்பற்ற நடவடிக்கையால் யாழ்பாணம் மவட்டத்தின் உரிமைகள் பதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் முன்னெடுத்த ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த குறித்த சங்கத்தின் தலைவர் PTJ ஜசோதன் மேலும் கூறுகையில் - யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் காணப்படும் கல்வி சாரா...

குறிகட்டுவான் இறங்குதுறையை நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி!

நயினாதீவு மற்றும் நெடுந்தீவு போன்ற இரண்டு தீவுகளுக்கும் யாழ்ப்பாணக் குடாநாட்டையும் இணைக்கும் பிரதான சமுத்திர அணுகல் வழியாக குறிகட்டுவான் இறங்குதுறை பயன்படுத்தப்படுகின்றது. இந்த இறங்குதுறை மூலம் குறித்த தீவுகளுக்கு பயணம் செய்கின்ற பயணிகள் மற்றும் பண்டங்கள் போக்குவரத்து படகுச் சேவைகளுக்கான வசதிகள் வழங்கப்படுவதுடன், சமூக, சமய மற்றும் நிர்வாக ரீதியாக பரந்துபட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது....
Loading posts...

All posts loaded

No more posts