யாழ்ப்பாணத்தில் இன்று முதல் பாணின் விலை 150 ரூபாய்!

யாழ்.மாவட்டத்தில் இன்று தொடக்கம் பாண் ஒரு றாத்தலின் விலை 150 ரூபாயாக இருக்கும் என யாழ்.மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கம் அறிக்கை ஒன்றின் ஊடாக தெரிஒஉத்துள்ளது. தற்பொழுது பாணின் விலையை மாத்திரமே குறைத்துள்ளோம். ஏனைய பேக்கரி உற்பத்திகளின் (பணிஸ் உள்ளிட்டவை) விலையை குறைக்கவில்லை. எதிர்வரும் காலங்களில் மாவின் விலை குறைக்கப்படுமாயின் அனைத்து பேக்கரி உற்பத்தி பொருட்களின்...

வடக்கிற்கான புகையிரத சேவை தொடர்பான விசேட அறிவிப்பு!

வடக்கு ரயில் மார்க்கத்தை மேம்படுத்த மேலும் 15 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்க இந்திய அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இதன்படி, கொழும்பு மற்றும் காங்கேசன்துறை இடையில் ரயில் கடவைகளில் உள்ள சமிக்ஞை...
Ad Widget

இன்று கன மழை பெய்யும் சாத்தியம்!!

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமத்திய மாகாணத்திலும் குருநாகல் மாவட்டத்திலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன்...

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பாக வெளியான விசேட அறிவிப்பு!

சாரதி அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் காலத்தை இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்க மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது. சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும் காலத்தை நீடிப்பதற்கான நடவடிக்கைகள் கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்டதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார். காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதில் மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை கருத்திற்க் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்...

யாழில் எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்பு!

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி இரண்டாம் வட்டார பகுதியில் மனித எழும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் வீடொன்றினை அமைக்க நேற்றைய தினம் அத்திவாரம் வெட்டும் போது, மனித எழும்புக்கூட்டு எச்சங்கள் காணப்பட்டுள்ளன. இது குறித்து ஊர்காவற்துறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், அப்பகுதியில் இடம்பெற்ற வேலைகளை உடனடியாக நிறுத்தி, அப்பகுதிக்குள் எவரும் செல்லாதவாறு...

யுனெஸ்கோவின் நேரடி கண்காணிப்பில் வட, கிழக்கிலுள்ள தொல்பொருள் மரபுரிமைகள் ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும் – செல்வராசா கஜேந்திரன்

குருந்தூர் மலை பகுதியில் தமிழர்கள் வாழவில்லை என்று தொல்பொருள் சக்கரவர்த்தி என்று குறிப்பிட்டுக் கொள்ளும் எல்லாவெல மேதானந்த தேரரின் கருத்து இனவாதம் மற்றும் மதவாதத்தை அடிப்படையாகக் கொண்டது. சிங்கள பேரினவாதம் தயாரித்த வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமை அறிக்கைகளை ஏற்க முடியாது. யுனெஸ்கோவின் நேரடி கண்காணிப்பின் கீழ் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்...

உக்ரைனின் அதிநவீன இராணுவ ஆயுதங்களை குண்டுவீசி அழித்த ரஷ்யா!

ரஷ்யா - உக்ரைன் இடையே மீண்டும் தீவிரமடைந்த போர் நடவடிக்கையின் போது உக்ரைனில் இராணுவ குடோன்களில் வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு அதிநவீன இராணுவ ஆயுதங்களை குண்டுவீசி அழித்ததாக ரஷ்ய இராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் உக்ரைனின் எம்.ஐ.8 ஹெலிகாப்டர் மற்றும் பல டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்ய இராணுவத்தின் செய்தி தொடர்பாளர்...

ரஷ்யாவின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் முதல் நாடு!!

பறிமுதல் செய்யப்பட்ட மற்றும் முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துக்களை தக்கவைத்துக்கொள்ள அனுமதிக்கும் சட்டத்தை பிரித்தானியா அறிமுகப்படுத்தியுள்ளது. ரஷ்ய அரசு மற்றும் தனிநபர்களுக்கு சொந்தமான முடக்கப்பட்ட சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படுவதை சட்டம் உறுதி செய்யும், அத்தகைய நடவடிக்கையை எடுக்கும் முதல் ஐரோப்பிய அரசாங்கம் என பிரித்தானியா மாறவிருக்கிறது. இதுவரையான காலபகுதியில், சுவிட்சர்லாந்து உட்பட பல மேற்கத்திய அரசாங்கங்கள், அமெரிக்கா...

மத நல்லிணக்கத்தை உருவாக்கும் வகையில் நடைபவனி முன்னெடுப்பு!

யாழ் மாவட்ட சர்வமதக் செயற்குழுவானது மத நல்லிணக்கத்தை உருவாக்கும் வகையில் நடைபவனியொன்றை இன்று முன்னெடுத்தது. அபிவிருத்திக்கான சமூக அமைப்புகளின் வலையமைப்பின் ஏற்பாட்டிலேயே இந்த நடைபவனி முன்னெடுக்கப்பட்டது. யாழ்., பொது நூலகத்தில் இருந்து ஆரம்பமான இந்த நடைபவனி, யாழ், போதனா வைத்தியசாலை வீதியூடாக சென்று மீண்டும் நூலகத்தை வந்தடைந்தது. இதன் போது தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப்...

மழையுடனான கால நிலை நீடிக்கும்!!

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழையுடனான கால நிலை நீடிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடமத்திய மாகாணத்திலும் குருநாகல் மாவட்டத்திலும் சிறிதளவு மழை பெய்யும் என்றும் ஊவா...

பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதையை விஸ்தரிப்பதற்கு தீர்மானம்!!

பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதையை விஸ்தரிப்பதற்கும் பயணிகள் முனையத்தை விரிவுபடுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போது காணப்படும் 900 மீட்டர் ஓடுபாதையை புனரமைத்து, புதிதாக 300 மீட்டர் ஓடுபாதையை இணைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்காக 168 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போதுள்ள சிறிய பயணிகள் முனையத்தில் நிலவும்...

நள்ளிரவு முதல் பேக்கரி பொருட்களின் விலை குறைப்பு!!

இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் பேக்கரி பொருட்களின் விலை குறைக்கப்படும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, நள்ளிரவு முதல் 450 கிராம் எடைகொண்ட ஒருஇராத்தல் பாண் மற்றும் ஏனைய பேக்கரி பொருட்களின் விலை 10 ரூபாயினால் குறைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

யாழில் மருத்துவர்கள் வீடு மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்!!

யாழ்ப்பாணம் கந்தர்மடம் பழம் வீதியில் உள்ள மருத்துவர்கள் இருவர் வீடு மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்றையதினம் இரவு 10.30 மணியளவில் (ஜூன் 19) மேற்கொள்ளப்பட்டது என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் நபர் எவருக்கும் பாதிப்பு இல்லை எனத் தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாகத் தெரிவித்தனர். தாக்குதல்...

இந்திய மருந்துகளால் தீவிர பாதிப்பு! குறிப்பிட்ட மருந்துகளை பயன்படுத்திய பலர் உயிரழப்பு!!

ந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்ட இரு மருந்துகளின் தரம் குறித்து ஆராய்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. குறிப்பிட்ட மருந்துகளை பயன்படுத்திய பலர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ள நிலையிலேயே அந்த மருந்துகளின் தரம் குறித்து ஆராய்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது என அமைச்சின் செயலாளர் ஜனக சிறீ சந்திரகுப்த தெரிவித்துள்ளார். இந்தியா வழங்கிய...

சீமெந்துக்கான வரி அதிகரிப்பு!!

இறக்குமதி செய்யப்படும் சீமெந்துக்கு விதிக்கப்பட்டுள்ள செஸ் வரியை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஜூன் 17ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த வரி திருத்தப்பட்டுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ கிராம் செயற்கை நிறம் கொண்ட அல்லது நிறமற்ற வெள்ளை சீமெந்து ஒரு கிலோ கிராமிற்கு விதிக்கப்பட்டிருந்த 3...

எரிபொருள் தொடர்பில் அமைச்சரின் விசேட அறிவிப்பு!!

நாட்டில் எரிபொருட்களுக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லை, நாளை மறுதினம் 9000 மெட்ரிக் தொன் பெட்ரோல் நாட்டை வந்தடையவுள்ளது என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையிலேயே அமைச்சர் கஞ்சன விஜேசேகர டுவிட்டர் பதிவின் மூலம் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

ரஷ்யாவிற்கு மறைமுகமாக கிடைக்கும் ஆயுத உதவி! இரு நாடுகளிடையே ஏற்பட்டுள்ள பதற்றம்

உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கு மறைமுகமாக சீனா ஆயுதங்களை வழங்கி வருவதாக குற்றச்சாட்டுகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு உதவியாக இதுவரை சீனா ஆயுதங்களை வழங்கவில்லை, இனியும் வழங்காது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. டுவிட்டர் பதிவொன்றிின் மூலம் அமெரிக்க வெளியுறவுத்துறை இதனை தெரிவித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா பிரச்சினை மற்றும் தைவான் பதற்றம் ஆகியவற்றின் காரணமாக...

வடமராட்சி சம்பவம் – மேலும் நால்வா் கைதின் பின் பிணை

அண்மையில் வடமராட்சி கிழக்கு பொதுளையாட்டரங்கில் பாராளுமன்ற உறுப்பினா் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்து கொண்ட நிகழ்வு ஒன்றில் இடம்பெற்ற விடயம் தொடர்பில் மேலும் நால்வர் நேற்று(15) கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனா். நேற்று(15) காலை பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்ட குறித்த நால்வரிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதை தொடா்ந்து கைது செய்யப்பட்டனா். பின்னா் கைது செய்யப்பட்டவா்கள் கிளிநாச்சி...

ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் யாழ் மாணவன் கொழும்பில் சடலமாக மீட்கப்பட்டார்!

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவா் ஒருவர் உயிாிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மஹரகம, கட்டுவல பிரதேசத்தில் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் மாணவர் விடுதியின், கீழ் தளத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் குறித்த மாணவன் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனை கண்ட ஏனைய மாணவர்கள் அவாின் கழுத்து பகுதியில் இருந்த கயிற்றை அகற்றி காப்பாற்ற முயற்சித்த...

அதிகரிக்கும் டொலரின் பெறுமதி!!

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை மற்றும் விற்பனை விலை தொடர்பான தகவல்களை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) அமெரிக்க டொலரின் விற்பனை கொள்முதல் விலை 300.51 ரூபாய்யாக பதிவாகியுள்ளது. இதேவேளை இதன் விற்பனை விலை ரூ.319.66. பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Loading posts...

All posts loaded

No more posts