Ad Widget

9 மாணவர் பயங்கரவாத தடுப்பு பொலிசாரிடம் ஒப்படைப்பு

பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அசம்பாவிதங்கள் தொடர்பில் கோரப்பட்ட 9 மாணவர்களை விசாரணைக்கு பயங்கரவாத தடுப்பு பொலிசாரிடம் சற்றுமுன்னர் பெற்றோரால் பல்கலைக்கழக பீடாதிபதிகள் மற்றும் துறைத்தலைவர்கள் முன்னிலையில் ஒப்படைத்தனர்.துணை வேந்தர் விடுமுறையில் உள்ளதால் பதில் துணைவேந்தராக கடமையாற்றுகின்ற பேராசிரியர் சத்தியசீலன் தலைமையிலான குழுவினர் மாணவர்களை பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.. இதன் மூலம் கைது செய்யப்பட்ட மாணவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த முடியும் என நம்பப்படுகிறது

அவர்களில் 5 மருத்துவபீட மாணவரும் 3 விஞ்ஞான பீட மாணவர்கள் 1 முகாமைத்துவ பீட மாணவரும் உள்ளடங்குகின்றனர்.ஏற்கனவே 3 மாணவர்கள் விடுவிக்கப்படாத நிலையில் மொத்தம் 12 மாணவர்கள் தற்போது கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது!

Related Posts