Ad Widget

8 வயது சிறுவனின் சடலம் மீட்பு

யாழ்.நுணாவில் மத்தி பகுதியிலுள்ள வீடொன்றின் கிணற்றிலிருந்து 8 வயது சிறுவனின் சடலம் ஞாயிற்றுக்கிழமை (14) காலை மீட்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

அதேயிடத்தை சேர்ந்த இராஜகோபால் ஆகாஷ் என்ற சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுவனின் பெற்றோர் சனிக்கிழமை (13) காலை சிறுவனை வீட்டில் தனியாக விட்டுவிட்டு கூலி வேலைக்கு சென்றிருந்த நிலையில், மாலை வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது சிறுவனை காணவில்லை. மேலும் பல இடங்களிலும் சிறுவனை தேடியும் கிடைக்கவில்லை.

இந்நிலையிலேயே ஞாயிற்றுக்கிழமை காலை கிணற்றடிக்கு சென்று பார்த்த போது கிணற்றுக்குள் சிறுவன் சடலமாக மிதந்துள்ளான்.

இதனையடுத்து, சிறுவனின் சடலம் மீட்கப்பட்டு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Related Posts