Ad Widget

6 மாதங்களில் இராணுவம் மீளழைக்கப்பட வேண்டும் : சிவாஜிலிங்கம்

வட மாகாணத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இராணுவத்தினரை 6 மாதங்களுக்குள் மீளழைக்க வேண்டும் என வட மாகாண உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

வலிகாமம் பகுதியில் சுமார் 4,000 ஏக்கர் காணி இராணுவத்தினரிடம் காணப்படுவதாக தெரிவித்த அவர் 600-700 ஏக்கர் காணி இராணுவ நடவடிக்கைகளுக்கு போதும் எனக் குறிப்பிட்டார்.

Related Posts