Ad Widget

510 மாணவர்களுக்கு மஹாபொல புலமைப்பரிசில் வழங்கிவைப்பு

Mahapola-logoபல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்களுக்கான மஹாபொல புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு இன்று காலை 9 மணிக்கு யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வியாபார அமைச்சின் ஏற்பாட்டில் 2011 2012 ம் கல்வியாண்டில் யாழ்.மாவட்டத்திலிருந்து பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெற்ற மாணவர்கள் 510 பேருக்கு மஹாபொல புலமைப்பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் பாரம்பரிய மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் மேலதிக அரசஅதிபர் ரூபினி வரதலிங்கம் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Posts