கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற நேர்முகத் தேர்வுகளில் தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளில் 4 ஆயிரத்து 800 பேருக்கு முதல்கட்டமாக நியமனம் வழங்கப்படவுள்ளது. அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலே அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது.
பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்வதற்காக நடத்தபட்ட நேர்முகத் தேர்வில் 25 புள்ளிகளுக்கு அதிகமாக பெற்றுக் கொண்டவர்களே இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
20ஆயிரம் பட்டதாரிகளை உள்வாங்கும் நோக்கில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டிருந்தது. இருப்பினும் முதல் கட்டமாக 4 ஆயிரத்து 800 பேருக்கே நியமனம் வழங்கப்படவுள்ளது.
புள்ளி வழங்குதலில் குளறுபடிகள் இருப்பதாகவும், எல்லாப் பட்டதாரிகளுக்கு ஒரே தடவையில் நியமனம் வழங்கவேண்டும் என்றும், வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம் நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.