புதிய தேர்தல் முறை மாற்றம் குறித்த 20வது திருத்தச் சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதன் பிரகாரம் தற்போது 225 ஆக காணப்படும் பாராளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 237 ஆக அதிகரிக்கவுள்ளது.
இதற்கான வர்த்தமானி அறிவித்தல் மிக விரைவில் வெளியிடப்படவுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமாக வரவுள்ள தேர்தல் முறை மாற்ற யோசனை தொடர்பான இறுதி தீர்மானத்தை எடுப்பதற்கான விசேட அமைச்சரவை கூட்டம் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றபோதே இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.