அர்ச்சுனா எம்.பி பிணையில் விடுதலை!

காணித் தகராறின் போது, பெண் ஒருவரைத் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு இன்று (29) மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 27ஆம் திகதி காலை இளவாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட அவர், மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இன்று வரை விளக்கமறியலில்...

மீண்டும் மின் கட்டணத்தை அதிகரிக்க முன்மொழிவு!

மின்சாரக் கட்டணங்களை மீண்டும் உயர்த்துவது தொடர்பாக இலங்கை பொதுப் பயன்பாட்டுகள் ஆணைக்குழுவிடம் (PUCSL) ஒரு முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேசிய பரிமாற்ற வலையமைப்பு சேவை வழங்குநர்கள் (தனியார்) நிறுவனம் இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணங்களை உயர்த்துவதற்காக, தனது திருத்தப்பட்ட மின்சாரச் செலவு மதிப்பீட்டை PUCSL-க்குச் சமர்ப்பித்துள்ளது. அண்மைய எரிபொருள் விலை உயர்வின் அடிப்படையில் இந்தத்...
Ad Widget

25 வருடங்களுக்கு மேலாக தங்கியிருந்த இராணுவத்தினர் திடீரென வெளியேறியுள்ளனர்!!

வடமராட்சிப் கிழக்கு நாகர்கோவில் பகுதியில் அமைந்துள்ள நாச்சிமார் ஆலயத்தில் தங்கியிருந்த இராணுவத்தின் திடீரென அங்கிருந்து வெளியேறியுள்ளனர். கடந்த 25 வருடங்களுக்கு மேலாக நாச்சிமார் ஆலயப் பகுதியைக் இராணுவத்தினர் கையகப்படுத்தியிருந்த நிலையில் நேற்றையதினம் அங்கிருந்து வெளியெறியுள்ளனர். இராணுவத்தினர் வெளியேறியதைத் தொடர்ந்து ஆலயத்தில் பக்தர்கள் வழிபாடுகளில் ஈடுபடவும் ஆரம்பித்துள்ளனர். ஆலயத்திலிருந்து வெளியேறிய இராணுவம் அங்கிருந்த அனைத்து கட்டிடங்களையும் இடித்து...

சிவில் சமூகத்தின் கூட்டு முயற்சி குறித்து யாரும் அஞ்சத்தேவையில்லை!!

அரசியல் தீர்வு குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணயப் பொதுச்சபை வழிநடத்தல் குழுவின் செயற்பாடு தமிழ் சட்டத்தரணிகள் பேரவையின் ஒற்றுமை முயற்சியை மேலும் பலப்படுத்துவதாகவே அமையும் எனச் சுட்டிக்காட்டியுள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் சட்டத்தரணிகள் பேரவை மற்றும் தமிழரசுக்கட்சி, ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி என்பன அக்கூட்டு...