மீண்டும் ஆரம்பமான செம்மணி புதைகுழி அகழ்வுப் பணிகள்!!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்று (27) யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டது. செம்மணி மனித புதைகுழியில் இதுவரையில் 2 கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 240 மனித என்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 239 என்புக்கூட்டு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில்...

நாடாளுமன்ற உறுப்பினர் இராமனாதன் அர்ச்சுனா கைது!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமனாதன் அர்ச்சுனா இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பெரியவிளான் பகுதியில் நிலத்தகராறு ஒன்றில் பெண்களை துப்பாக்கி முனையில் மிரட்டிய சம்பவம் தொடர்பில் விசாரணைக்காக அழைக்கப்பட்டதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சர்ச்சைக்குரிய பெரியவிளான் நிலத்தின் உரிமை தொடர்பாக மல்லாகம் நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டு, அந்த வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது....
Ad Widget

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை கைத்தொழில் வலயமாக மாற்றம்!!

30 வருடங்களுக்கு மேலாக இயங்காத நிலையிலுள்ள காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையினை தொழில் மற்றும் நிதி திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பார்வையிட்டார். யுத்தத்தின் காரணமாக கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இயங்காத நிலையில் காணப்படுகின்ற காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையினை மீள இயக்குவதற்கான யோசனையினை புதிய அரசாங்கம் முன் வைத்துள்ளது. கடந்த 07 ஆம் திகதி...

அருச்சுனாவுடன் தர்க்கத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் பெண்னுக்கு விளக்கமறியல்!

யாழ்ப்பாணத்தில் அருச்சுனா எம்.பி யுடன் முரண்பட்ட பெண்ணொருவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ள மல்லாகம் நீதவான் நீதிமன்று , குறித்த பெண்ணின் குழந்தையை அப்பெண்ணே வைத்திருக்கவும் மன்று அனுமதித்துள்ளது. பெரியவிளான் பகுதியில் உள்ள காணி ஒன்று தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினருக்கும் , மற்றுமொரு தரப்பினருக்கும் இடையில் காணி பிணக்கு ஒன்று நிலவி வரும் நிலையில் , நேற்றைய...

குழந்தை விற்பனை முயற்சி: தாய் உட்பட இருவர் பொலிஸாரிடம் ஒப்படைப்பு

கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவில் ஒன்றரை வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை ஒன்றை ஐம்பதாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்ய முற்பட்ட தாய் மற்றும் தந்தை எனக் கூறப்படும் ஆண் ஒருவரும் அப்பகுதி மக்களால் தருமபுரம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். குறித்த மேலும் தெரியவருவதாது, யாழ்ப்பாணம் - மாதகல் பகுதியைச் சேர்ந்த...