- Friday
- April 10th, 2026
யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவனை பழிவாங்குவதற்காக , இளைஞனின் தம்பியான 14 வயதான சிறுவனை கடத்தி சென்ற ஆடைகளை களைந்து சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மற்றுமொருவர் தலைமறைவாகியுள்ளார். மருதனார்மடம் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக குறித்த இளைஞனின் 14 வயதான தம்பியை இருவர் கடத்தி சென்று இரகசிய...
அன்னை பூபதியின் 38வது நினைவுதினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி உருவப்படம் தாங்கிய ஊர்திப்பவனி நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் நினைவிட முன்றலில் இருந்து நேற்றைய தினம் ஆரம்பமாகியது. இந்த ஊர்தியானது தமிழர் தாயகத்தை வலம்வந்து மட்டக்களப்பிலிருக்கும் அன்னை பூபதி நினைவிடத்தை சென்றடையும். இந்திய அரசாங்கத்திடம் உடனடியாக போர் நிறுத்தத்தை நடைமுறைப்டுத்த வேண்டும் மற்றும் புலிகளுடன் பேச்சு...
வடக்கு மாகாணத்தில் நிரந்தரமாக வசிக்காத ஒருவரான அமைச்சரை வடக்கு மாகாண அபிவிருத்தி குழுக் கூட்டங்களுக்கு தலைவராக நியமித்ததன் ஊடாக வடக்கு மாகாணத்திற்கு அநீதி இழைக்கப்படவில்லை. வடக்கு மாகாணத்தில் மாவட்ட மட்ட கூட்டங்களில் சமர்ப்பிக்கப்பட்ட ஊழல் தொடர்பாக சாட்சிகளுடன் முறைப்பாடுகள் முன்வைக்கப்படவில்லை என மாவட்டச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார் என ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான நளிந்த...
வடக்கு மாகாணத்தில் நிரந்தரமாக வசிக்காத ஒருவரான அமைச்சரான இராமலிங்கம் சந்திரசேகரை, வடக்கு மாகாண மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டங்களுக்கு தலைவராக நியமித்ததன் ஊடாக குறித்த மாகாணத்திற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதா? வடக்கு மாகாணத்தில் மாவட்ட மட்ட கூட்டங்களில் சமர்ப்பிக்கப்பட்ட ஊழல் தொடர்பான ஏதாவது ஒரு முறைப்பாட்டுக்காவது அமைச்சர் சந்திரசேகரன் இதுவரை நடவடிக்கை எடுத்திருக்கிறாரா? என யாழ்.மாவட்ட பாராளுமன்ற...
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று வெள்ளிக்கிழமையுடன் (10) நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு இன்று (10) முதல் எதிர்வரும் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம்...
