போராட்ட களத்தில் இருந்து சந்திரகேசரர் உள்ளிட்டவர்களும் வெளியேற்றம்!!

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் நடைபெற்று வரும் அணையா விளக்கு போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் தலைமையிலான குழுவினரையும் போராட்ட களத்தில் நின்ற மக்களால் அவ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். செம்மணியில் நடைபெற்று வரும் அணையா விளக்கு போராட்டம் இன்றைய தினம் புதன்கிழமை மூன்றாவது நாளாக தொடர் போராட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்நிலையில்...

‘அணையா தீபம்‘ போராட்டக்களத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட தமிழ் அரசியல் தலைவர்கள்!

செம்மணியில் புதையுண்டுள்ள உறவுகளுக்கு, சர்வதேச நீதி கோரி செம்மணி வளைவுப் பகுதியில் கடந்த 23 ஆம் திகதி முதல் 3 நாட்கள் ”அணையா தீபம்’ எனப்படும் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் குறித்த போராட்டத்தின் இறுதி நாளான இன்று பெருமளவான மக்கள் குறித்த பகுதியில் ஒன்று கூடி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்து...
Ad Widget

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது – பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உறுதி

நாட்டினுள் எந்தவொரு எரிபொருள் தட்டுப்பாடும் ஏற்படாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உறுதியளித்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு தேவையான எரிபொருள் முன்பதிவுகள் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதன் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்தார். "மக்களுக்கு சொல்ல விரும்புவது, எந்த பிரச்சனையும் இல்லாமல் அடுத்த இரண்டு மாதங்களுக்கு தேவையான எரிபொருளை நாங்கள் முன்பதிவுகள் செய்துள்ளோம். அந்த முன்பதிவுகள் உறுதி...

வலி. வடக்கில் நான்காவது நாளாகவும் போராட்டம்!

வலி. வடக்கில் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள 2,400 ஏக்கர் காணிகளை விடுவிக்க கோரி நேற்றைய தினம் (24) நான்காம் நாளாக காணி உறுதிகளுடன் உரிமையாளர்கள் போராட்டத்தினை முன்னெடுத்தனர். நான்காவது நாளான நேற்றைய தினம் காணிக்கான தமது உறுதிகளை எடுத்து வந்து அதனை காண்பித்து போராட்டத்தினை முன்னெடுத்தனர். காணிகளை விடுவிக்க கோரி கடந்த சனிக்கிழமை மயிலிட்டி சந்தியில்...

தேசியத்திற்கு எல்லை வேலி போடுவதை விட தேசியத்திற்குள் இருக்கவுள்ளோர் யார்?? – ஆறு திருமுருகன்

தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியின் நிறுவுனர் நினைவு தானமும் பரிசளிப்பு விழாவும் செவ்வாய்க்கிழமை (24) நடைபெற்ற நிலையில் இந்நிகழ்வில் கலந்துகொண்டு ஆசியுரை வழங்கிய சந்தர்ப்பத்திலே அவர் அங்கு உரையாற்றினார். இன்று தேசியம், தமிழ்த் தேசியம் மற்றும் சுதேசியம் ஆகிய சொற்களெல்லாம் அரசியல்வாதிகளிடத்தே அடிக்கடி நடமாடினாலும் மகாஜனாக் கல்லூரி ஸ்தாபகர் பாவலர் துரையப்பா பிள்ளை அவர்கள் இந்த மண்ணிலே...

தமிழினப் படுகொலை தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யுங்கள்!!

ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசால் திட்டமிட்ட வகையில் புரியப்பட்ட இனப்படுகொலைக்கும், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யும் உள்ளகப் பொறிமுறைகளை நடைமுறைப்படுத்துவது இனமேலாதிக்கம் மிகுந்திருக்கும் இலங்கைத் தீவில் சாத்தியமற்றது என்பதால், பொறுப்புக்கூறலை உறுதிசெய்யும் வகையிலான சர்வதேச விசாரணைக்கு வழிசெய்யுமாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன், இலங்கை வந்துள்ள...