இலங்கைக்கான பிரித்தானியத் தூதுவர் யாழிற்கு விஜயம்!

இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் ஆண்ட்ரூ பேட்ரிக் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த நிலையில் நேற்றைய தினம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் பிரதிநிதிகளை சந்தித்திருந்தார். யாழில். உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் அவர்களை சந்தித்த தூதுவர் , அவர்களின் குறைகளையும் நீதிக்கான போராட்டத்தையும் கேட்டறிந்தார். அத்துடன் நல்லிணக்கத்திற்கான முயற்சிகளை இங்கிலாந்து தொடர்ந்தும் முன்னெடுத்து செல்லும் எனவும் உறுதியளித்தார்....

தமிழரசுக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினருக்கு எதிராக நடவடிக்கை?

வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர் பொன்னம்பலம் இராஜேந்திரம் கட்சியின் தீர்மானத்தை மீறி நடுநிலை வகித்தமை தொடர்பில் கட்சியினால் விளக்கம் கோரப்பட்டுள்ளது. ஒரு வார காலத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் உறுப்பினர் கட்சி உறுப்புரிமையில் இருந்து இடைநிறுத்தபடுவார் எனவும் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் கடிதம்...
Ad Widget

யாழில் 50 பேருக்கு டெங்கு!

யாழ்ப்பாணத்தில் டெங்குக் காய்ச்சலினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இந்த வருடத்தின் இது வரையிலான காலப் பகுதியில் யாழ் . போதனா வைத்தியசாலையில் மாத்திரம் 50 பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர் என யாழ் போதனா வைத்தியசாலை பிரதி பணிப்பாளர் சி. யமுனானந்தா தெரிவித்துள்ளார். அத்துடன்”...

ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் நள்ளிரவு முதல் வேலைநிறுத்தம்!

பதவி உயர்வு உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்வைத்து, இன்று (19) நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று காலை ரயில்வே அதிகாரிகளுடன் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடிய பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்று தொழிற்சங்கத்தின் செயலாளர் கே.டி. துமிந்த பிரசாத்...