Ad Widget

கொடூரமாக தாக்கப்பட்ட நபரை காப்பாற்றிய இராணுவம்!

விஸ்வமடு தேராவில் இராணுவ முகாமிற்கு அருகில் பிரதேசவாசிகள் குழுவினால் இளைஞன் ஒருவர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுக்கொண்டிருந்த நிலையில், குறித்த நபர் இராணுவத்தினரால் மீட்கப்பட்டு புதுக்குடியிருப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இது குறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில், இராணுவ அதிகாரிகள் உடனடியாக இது குறித்து ​பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் பொலிஸ் அதிகாரிகள் வருவதற்கு தாமதம்...

தேர்தலில் தனித்து போட்டியிடவுள்ள தமிழரசுக் கட்சிக்கு சவால்கள் ஏதும் கிடையாது – சுமந்திரன்

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடவுள்ள இலங்கை தமிழரசுக் கட்சிக்கு சவால்கள் ஏதும் கிடையாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியுடனான நேற்றைய(செவ்வாய்கிழமை) பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “அரசாங்கத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, தற்போதும் எமது மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகள்...
Ad Widget

இம்மாதத்திற்குள் புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் !

ரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை இம்மாதத்திற்குள் வெளியிட திட்டமிட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது பரீட்சை விடைத்தாள்களை மதிப்பிடும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் பணிகள் நிறைவடையும் என்றும் அதன்பின்னர் பெறுபேறுகள் வெளியிடப்படும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

யாழ்.மாநகர எல்லைக்குள் டெங்கு ஒழிப்பு – 09 பேருக்கு எதிராக வழக்கு!

யாழ். மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கையின் போது 09 குடியிருப்பாளர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், 111 பேருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு , சிவப்பு அறிவித்தல் கொடுக்கப்பட்டுள்ளதாக மாநகர சுகாதார பிரிவு அறிவித்துள்ளது. பருவ மழையினை அடுத்து யாழில் டெங்கு நுளம்பின் அதிகரிப்பு காரணமாக , யாழில். டெங்கு காய்ச்சலின்...

அச்சுவேலியில் மது போதையில் வீட்டிற்கு தீ வைத்தவர் கைது!

து போதையில் வீட்டுக்கு வந்து , மனைவியுடன் முரண்பட்டவர் , குடியிருக்கும் வீட்டினை தீ வைத்து கொளுத்தியுள்ளார். அச்சுவேலி பாரதி வீதியில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் வீடு பகுதிகளவில் எரிந்துள்ளது. வீட்டிற்கு தீ வைத்த குற்றச்சாட்டில் குடும்பஸ்தர் அச்சுவேலி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் நிறை போதையில் வீட்டிற்கு வந்து , மனைவி ,பிள்ளைகளுடன்...

யாழ்.மாவட்ட பதில் அரசாங்க அதிபராக ம.பிரதீபன்!

யாழ்.மாவட்ட பதில் அரசாங்க அதிபராக மருதலிங்கம் பிரதீபன் கடமையாற்றுவார். என பொது நிர்வாக உள்நாட்டவர்கள் அமைச்சு யாழ்.மாவட்ட செயலகத்திற்கு எழுத்து மூலம் அறிவித்ததாக மாவட்ட செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. யாழ்.மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய கணபதிப்பிள்ளை மகேசன் அமைச்சு ஒன்றின் செயலாளராக பதவி உயர்வு பெற்றுச் சென்ற நிலையில் பதில் கடமையை மேலதிக அரசாங்க அதிபராக...

கூட்டணி குறித்து கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் பேச்சு – செல்வம் அடைக்கலநாதன்

தமிழரசுக்கட்சியை தவிர்ந்த ஏனைய கட்சிகள் கூட்டமைப்பாக தேர்தலில் போட்டியிடவுள்ளதாக ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கலந்துரையாடல்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக டெலோ, புளொட், ஈபிஆர்எல்எப், தமிழ்தேசிய மக்கள் கூட்டணி, ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன இணைந்து இந்த கூட்டமைப்பு அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்தேசிய...

யாழ். மாநகர மேயர் வேட்பாளராக மீண்டும் ஆர்னோல்ட்!! – மணிக்கும் வெற்றி வாய்ப்பு!!

யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ள மேயர் தெரிவில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முன்னாள் மேயர் இ. ஆர்னோல்ட் மீளவும் களமிறக்கவுள்ளார் என்று தெரியவருகின்றது. இதேவேளை, மணிவண்ணன் தரப்புக்குக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ரெலோ, புளொட் ஆதரவளிக்கவுள்ளதாகத் தெரியவரும் நிலையில், மீண்டும் மாநகர மேயராக மணிவண்ணன் தெரிவாவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகவும் கூறப்படுகின்றது....

பிரான்சை இல்லாமல் செய்துவிடுவோம்: ரஷ்யா பகிரங்க எச்சரிக்கை

பிரான்ஸ் நாட்டையே இல்லாமல் செய்துவிடுவோம் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைன், ரஷ்ய போர் தீவிரமடைந்து வரும் நிலையில் பல ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளது. இந்நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தொடர்ந்து உக்ரைனுக்கு ஆதரவு வழங்கி வரும் நிலையில், பிரான்ஸ் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்துவோம் என புடின் ஆதரவாளர்கள் எச்சரித்துள்ளனர்....