Ad Widget

யாழ். நிலாவரை கிணறுக்கு அருகாமையில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் ஆய்வு

யாழ்ப்பாணம் நிலாவரை கிணறுக்கு அருகாமையில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளால் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்படுகிறது. நிலாவரைக் கிணறு பகுதிக்கு இன்று (வியாழக்கிழமை) முற்பகல் சென்ற தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் மரம் ஒன்றின் கீழ் அகழ்வு நடவடிகையை முன்னெடுத்து ஆய்வுப் பணிகளை முன்னெடுத்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த வலி.கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் அதிகாரிகளிடம்...

வடக்கில் கடந்த 20 நாட்களில் 300இற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று!

வடக்கு மாகாணத்தில் கடந்த ஜனவரி முதலாம் திகதியில் இருந்து 351 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழில் அவரது அலுவலகத்தில்நேற்று (புதன்கிழமை) நடத்தப்பட்ட ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் கூறுகையில், “வடக்கு மாகாணத்தில் கடந்த ஜனவரி முதலாம் திகதியில் இருந்து நேற்று...
Ad Widget

இலங்கையில் சுமார் 10 மாதங்களுக்குப் பின்னர் மீளத் திறக்கப்படும் விமான நிலையங்கள்

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சுமார் 10 மாதங்களாக மூடப்பட்டிருந்த விமான நிலையங்கள் இன்று (வியாழக்கிழமை) முதல் சுற்றுலாப் பயணிகளுக்காக மீளத் திறக்கப்படவுள்ளன. அதன்படி இன்றைய தினம் சுமார் 15 விமானங்கள் இலங்கைக்கு வரவுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தியடைந்துள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான...

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 55 ஆயிரத்தைக் கடந்தது – 274 இறப்புக்களும் பதிவு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 770 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடைய 768 பேரும் சவுதி அரேபியா மற்றும் குவைட்டில் இருந்து நாடு திரும்பிய 2 பேரும் அதில் உள்ளடங்குவதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது....

யாழ். முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் வெட்டும் பணிகள் ஆரம்பம்

யாழ்.பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் வெட்டும் பணிகள் நேற்று (புதன்கிழமை) பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டன. யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி கடந்த 8ஆம் திகதி இரவு பல்கலைக்கழக நிருவாகத்தினால் இடித்து அழிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து தொடர் எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்....