Ad Widget

சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவோருக்கு போதைக்கு அடிமையானவரா என்பதை அறிய புதிய மருத்துவ பரிசோதனை!!

கனரக வாகன சாரதி உரிமத்தை வழங்கும்போது விண்ணப்பதாரர் போதைக்கு அடிமையானவரா என்பதை அடையாளம் காண மருத்துவ சான்றிதழில் ஒரு பரிசோதனையை மேலதிமாகச் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தகவலை பயணிகள் போக்குவரத்து முாகமைத்துவ இராஜாங்க அமைச்சர் திலம் அமுனுகம இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த புதிய திட்டம் விரைவில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்....

வலி. கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் நிரோஷுக்கு முன் பிணை வழங்கியது நீதிமன்றம்!!

வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ், ஒரு லட்சம் ரூபா பெறுமதியான 2 ஆள் பிணை முறியில் எதிர்பார்க்கை பிணையில் விடுவித்து மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் விடுவித்தது. வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் நிரோஷ் மீதான குற்றச்சாட்டு வழக்கை பொலிஸார் முன்னெடுக்கும் போது முழுமையான ஒத்துழைப்பை வழவங்குவதுடன், நீதிமன்றில் தவறாது முன்னிலையாக...
Ad Widget

விபத்தில் பெண்ணொருவர் உயிரிழப்பு – இருவர் படுகாயம்

தென்மராட்சி நுணாவில் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த எரிபொருள் தாங்கி மீது கார் மோதியதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று (புதன்கிழமை) நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது. நுணாவில் சந்திக்கு அண்மையில் ரயர் கடைக்கு முன்பாக ரயர் திருத்த வேலைக்காக எரிபொருள் தாங்கி வாகனம் ஒன்று நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த...

பொய்யான முறைப்பாடு செய்த பெண்ணை பிறிதொரு வழக்கில் கைது செய்ய நீதிவான் அறிவுறுத்தல்!!

பொய் முறைப்பாடு வழங்கியதுடன் , குறித்த முறைப்பாடு தொடர்பில் பொலிஸார் பக்க சார்பாக நடந்து கொண்டார்கள் என குற்றம் சாட்டிய பெண் , நீதிமன்றில் வழக்கு விசாரணை நடந்த போது, தனது முறைப்பாட்டை மீள பெறுவதாக மன்றில் கூறியதை அடுத்து குறித்த பெண்ணை மற்றொரு வழக்கைப் பதிவு செய்து கைது செய்யுமாறு பருத்தித்துறை நீதிமன்ற நீதிவான்,...

மழை வெள்ளம் தொடர்பாக அவதானமாக இருக்க வேண்டும் – யாழ். மக்களுக்கு எச்சரிக்கை

மழை வெள்ளம் தொடர்பாக மக்களை அவதானமாக இருக்குமாறு யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சி.யமுனாநந்தா அறிவுறுத்தியுள்ளார். யாழில் பல இடங்களில் வெள்ளம் தேங்கியுள்ளதால் பல்வேறுப்பட்ட நோய் தாக்கங்கள் ஏற்படும் அபாயமுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பலர் வெள்ளங்களின் ஊடாக நடந்து செல்வதால் தோல் நோய்கள் ஏற்படலாம் என்றும் சேறுகளினால் புண்கள் ஏற்படலாம் என்பதால், அனைவரும் அவதானமாக...

யாழ் போதனா வைத்தியசாலைக்கு புதிய வைத்திய நிபுணரை நியமிக்குமாறு கோரியுள்ளோம் – வைத்தியர் த. சத்தியமூர்த்தி

யாழ் போதனா வைத்தியசாலை மருத்துவ சேவையை இடைநிறுத்தி ஒரு வைத்திய நிபுணரை விடுவித்தல் வைத்திய சேவையை பாதிக்கும் , புதிய வைத்திய நிபுணரை நியமிக்குமாறு சுகாதார அமைச்சிடம் கோரியுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று புதன்கிழமை நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். யாழ் போதனா...

இலங்கையில் மிக இளைய வயது கொரோனா மரணம் பதிவு

இலங்கையில் மிகவும் இளைய வயது கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கொழும்பு ரிஜ்வோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பிறந்து 20 நாட்களேயான குழந்தை ஒன்று இவ்வாறு உயிரிழந்துள்ளது. தொட்டலக பகுதியை சேர்ந்த குறித்த குழந்தை நேற்று சுகயீனம் காரணமான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த குழந்தையின் பெற்றோருக்கு மேற்கொள்ளப்பட்ட...

வவுனியாவில் திடீரென ஏற்பட்ட மாற்றம்!

வவுனியாவில் இன்று (09) காலை அதிகளவான பனி மூட்டம் காணப்பட்ட நிலையில் சாரதிகள் வாகனங்களை செலுத்துவதில் பெரும் இடையூறுகளை சந்தித்திருந்தனர். வவுனியா நகர்ப்புறம் உட்பட அனைத்து இடங்களிலும் காலை 8.00 மணிவரை அதிகளவான பனி மூட்டம் காணப்பட்டது. இதன் காரணமாக வேலைக்கு செல்வோர், வாகனச் சாரதிகள் எனப் பலரும் சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர். ஏ-9 வீதி உட்பட...

தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்ட மருத்துவ வல்லுநரை யாழ்.போதனாவிலிருந்து விடுவிப்பதாக சுகாதார அமைச்சு உறுதிமொழி

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றம் வழங்கப்பட்ட மருத்துவ வல்லுநர் கணேசமூர்த்தியை விடுவிப்பதற்குரிய கடிதத்தை மத்திய சுகாதார அமைச்சு அங்கிருந்து அனுப்புவதாக உறுதிமொழி அளித்ததை அடுத்து மருத்துவர்களின் அடையாள சேவைப் புறக்கணிப்புப் போராட்டம் இடைநிறுத்தப்பட்டது. மத்திய சுகாதார அமைச்சு ஒருவாரகாலத்திற்குள் உணர்வழியியல் மருத்துவ வல்லுநர் கணேசமூர்த்தியை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலிருந்து விடுவிக்கத் தவறினால் ஆறான வாரம் தமது...

மன்னார் இளைஞர், யுவதிகளுக்கு காற்றாலை மின் நிலையம் ஊடாக வேலைவாய்ப்பு- டக்ளஸ்

மன்னாரில் உருவாக்கப்பட்டுள்ள காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தின் ஊடாக பிரதேச இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அத்துடன், வீதிகள் புனரமைப்பு மற்றும் குழாய் கிணறுகளை அமைத்துக் கொள்ளுதல் போன்ற வாய்ப்புகளும் மன்னார் மக்களுக்கு கிடைத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மன்னாரில் நேற்றையதினம் (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தின் அங்குரார்ப்பண...

பலாலி தனிமைப்படுத்தல் மையத்தில் இருந்து 89 பேர் வீடு திரும்பினர்

பலாலியில் உள்ள இலங்கை விமானப்படை தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட 89 பேர் தனிமைப்படுத்தல் காலத்தை பூர்த்தி செய்த நிலையில் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட 37 ஆண்கள் மற்றும் 52 பெண்கள் அடங்கிய குழுவினர் மேலும் இரண்டு வாரங்களுக்கு தமது வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும்...