Ad Widget

2 வாரங்களில் 10 வன்புணர்வு; உடனடி விசாரணைக்கு கோருகிறார் கல்வி இராஜாங்க அமைச்சர்

வடக்கு மாகாணத்தில் கடந்த 14 நாள்களுக்குள் பாடசாலை மாணவிகள் மீது 10 வன்புணர்வு சம்பவங்கள் பதிவாகியிருப்பதாக தமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அதிர்ச்சித் தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளார் கல்வி இராஜாங்க அமைச்சர் வி. இராதாகிருஸ்ணன் .

இதில் சில வன்புணர்வு சம்பவங்கள் வெளியாட்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்படுகின்ற போதிலும் இதில் சில பாடசாலை ஆசிரியர்களும் ஈடுபட்டுள்ளமை கவலையளிப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கடந்த 2 வாரங்களில் இத்தகைய வன்புணர்வுகளால் பாதிக்கப்பட்ட 10 மாணவிகள் வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் இச்சம்பவம் தொடர்பில் உடன் விசாரணை நடத்தி குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துமாறு வலியுறுத்தியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Posts