Ad Widget

2 ஆயிரம் லீற்றர் டீசல் கிணற்று நீருடன் கலப்பு

Petrol-priceகல்வியங்காட்டிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் ஏற்பட்ட கசிவு காரணமாக அப்பிரதேசத்திலுள்ள பல கிணறுகளில் நீருடன் டிசல் கலந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

நிலத்தில் புதைத்திருந்த டீசல் தாங்கி மூலம் 2 ஆயிரம் லீற்றர் டீசல் கசிவடைந்து வீணாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை எரிபொருள் கசிவினை அடுத்த இது தொடர்பாக அப்பகுதியிலுள்ள கிணறுகளில் ஆய்வுகள் நடாத்தப்பட்டு நீரில் டீசல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அண்மையில் மோட்டார் சைக்கிள் ஒன்று தீடிரென்று தீப்பற்றி எரிந்து அதிலிருந்த ஒருவரும் படுகாயமடைந்து பின்னர் மரணமாகியிருந்தார்.

அத்தோடு குறித்த நிலையத்தின் முகாமையாளரிடம் 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபா பணமும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

Related Posts