Ad Widget

19 இலங்கையர்கள் இந்தோனேசியாவில் கைது!!

வீசா சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் பேரில் 19 இலங்கையர்கள், இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுற்றுலாப் பயணிகளாக இந்தோனேசியாவிற்கு சென்ற இலங்கையர்களே இவ்வாறு வீசா சட்டங்களை மீறியுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் பாயுபாயு நகரில் தங்கியிருந்த போது இந்த இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுற்றுலாப் பயணிகளாக நாட்டுக்குள் பிரவேசித்து அங்கே தங்கும் வகையில் கிராமொன்றில் குடியேறியதாக இலங்கையர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Related Posts