Ad Widget

14 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் மூவர் விடுதலை !!

2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் கைது செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் மூவர் 14 வருடங்களின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

வேலணையை சேர்ந்த இ. திருவருள், யாழ் கரவட்டியை சேர்ந்த ம. சுலக்சன், முள்ளியவளையை சேர்ந்த க. தர்சன் ஆகிய மூவருக்கும் எதிராக வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இருப்பினும் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூப்பிக்கப்படாத நிலையில், குறித்து மூவரையும் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் வவுனியா மேல் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

Related Posts