அச்சுவேலி பகுதியில் சிறுவர் நன்னடத்தை இல்லம் அமைப்பதற்கு 14 மில்லியன் ரூபா நிதியினை சிறுவர் மற்றும் மகளீர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த வடமாகாண சிறுவர் நன்னடத்தை அதிகார சபையின் பணிப்பாளர் எஸ்.விஸ்வரூபனிடம் கையளித்தார்.
யாழ். நல்லூர் பிரதேச செயலகத்தில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற பட்டப்படிப்புக்கான பயிற்சி பட்டறையின் ஆரம்ப நிகழ்வின் போதே இந்நிதியினை அமைச்சர் வழங்கினார்.
கோப்பாய் பகுதியில் இயங்கி வந்த சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு நிலையம் சேமடைந்த நிலையில், அச்சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு நிலையத்தினை அச்சுவேலிப் பகுதியில் நிறுவுதற்கு உதவி புரியுமாறு வடமாகாண சிறுவர் நன்னடத்தை அதிகார சபையின் பணிப்பாளர் அமைச்சருக்கு ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தார்.
இக்கோரிக்கைக்கு அமைவாகவே இன்று 14 மில்லியன் ரூபா நிதியினை சிறுவர் மகளீர் விவகார அமைச்சர் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.