Ad Widget

112 வயதை கடந்தும் இந்த தாத்தாவுக்கு கம்பீரம் குறையவில்லை

யாழில் 112 வயதினை கடந்தும் வயோதிபர் ஒருவர் ஆரோக்கியமாக வாழ்ந்து வருகின்றார்.

நவாலி தெற்கு மானிப்பாயை சேர்ந்த கணபதி காத்தி என்பவர் கடந்த 1902ம் ஆண்டு நவம்பர் மாதம் 13ம் திகதி பிறந்தார். கடந்த மாதம் தனது 112 ஆவது பிறந்த தினத்தினையும் கொண்டாடி இருந்தார்.

எவருடைய உதவியும் இன்றி தனது தேவைகளை தானே பூர்த்தி செய்து கொண்டும் இன்றும் தடுமாறாத உடலுடனும் உளத்துடனும் சாதாரணமாக நடமாடி திரிகின்றார்.

எந்தவொரு போதை பொருளுக்கும் அடிமையாகாமல் இருந்ததுடன் சிறந்த உணவு பழக்கமும் தளராத உழைப்புமே தனது நீண்ட ஆயுளுக்கு காரணம் என அவர் தெரிவித்து உள்ளார்.

112-age-Kanapathy-Kaathy-1

112-age-Kanapathy-Kaathy-2

112-age-Kanapathy-Kaathy-3

Related Posts