Ad Widget

111 வர்த்தகர்களிடம் ரூ.420,500 தண்டப்பணம் வசூல்

fineகாலாவதியான பொருட்கள் மற்றும் விலைப்பட்டியல் காட்சிப்படுத்தாத 111 வர்த்தகர்களுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கையில் 4 லட்சத்து 20 ஆயிரத்து 500 ரூபா தண்ட பணம் நீதிமன்றங்களினால் அறவிடப்பட்டுள்ளதாக பாவணையாளர் அதிகார சபையின் யாழ். மாவட்ட அதிகாரி நவரட்ணம் சிவசீலன் தெரிவித்தார்.

யாழில் கடந்த 5 மாதங்களில் 5 நீதிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 111 வர்த்தகர்களுக்கு எதிராக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நடவடிக்கை எடுக்கப்பட்ட 111 வர்த்தகர்களும் யாழ். மல்லாகம், பருத்தித்துறை, சாவகச்சேரி, ஊர்காவற்துறை நீதிமன்றங்களில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

ஆஜர்ப்படுத்தப்பட்டவர்களில் 16 வர்த்தகர்கள் நீதிமன்றிற்கு சமூகமளிக்காததால் அவர்களுக்கு பிடியாணை பிறப்பித்துள்ளதுடன், 95 வர்த்தகர்களுக்கு 4 லட்சத்து 20 ஆயிரத்து 500 ரூபா தண்டம் அறவிடப்பட்டுள்ளதாக பாவணையாளர் அதிகார சபையின் யாழ். மாவட்ட அதிகாரி மேலும் கூறினார்.

Related Posts