Ad Widget

05 பொலிஸ் நிலையங்கள் மீது மக்கள் அதிருப்தி!

Sl_police_flagயாழ்ப்பாணத்தில் உள்ள ஐந்து பொலிஸ் நிலையங்களுக்கு எதிராக பொதுமக்கள் முறைப்பாடுகள் மேற்கொண்டு உள்ளனர் என்று தேசிய பொலிஸ் ஆணைக் குழுவின் வட மாகாண அலுவலகம் அறிவித்து உள்ளது.

யாழ்ப்பாணம், கோப்பாய், நெல்லியடி, நெடுங்கேணி, வட்டுக்கோட்டை ஆகிய பொலிஸ் நிலையங்களின் செயற்பாட்டில் திருப்தி கிடையாது என்று முறைப்பாடுகள் கிடைத்து உள்ளன என்று இவ்வலுவலகத்தின் பணிப்பாளர் டாக்டர் கே. தியாகராஜா தெரிவித்து உள்ளார்.

இவ்வலுவலகம் யாழ். அரச அதிபர் அலுவலகத்தில் இயங்கி வருகின்றது. கடந்த ஜனவரியில் இருந்து மே வரை பல்வேறு விடயங்கள் தொடர்பில் பொதுமக்கள் மேற்கொண்ட முறைப்பாடுகள் தொடர்பில் இப்பொலிஸ் நிலையங்கள் தவறி விட்டன என்று ஆணைக் குழு அலுவலகத்துக்கு கிடைத்த முறைப்பாடுகள் கூறுகின்றன.

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளிடம் ஆணைக் குழு அலுவலகம் விளக்கம் கோரி உள்ளது.

Related Posts