Ad Widget

 நல்லூர் ஆலய சூழலில் மதுபானம் அருந்திய பெண் உட்பட இருவர் கைது

நல்லூர்க் கந்தசுவாமி ஆலய பின்வீதியில் இருந்து மதுபானம் அருந்திய பெண் மற்றும் முதியவரை, நேற்று முன்தினம் வியாழக்கிழமை (10) இரவு கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பைச் சேர்ந்த 53 வயதுடைய பெண் மற்றும் 60 வயதுடைய முதியவர் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுபானம் அருந்திக் கொண்டிருந்த இருவரும், பொலிஸாரைக் கண்டதும் அதனை நிலத்தில் ஊற்றியுள்ளனர். அவர்களைக் கைது செய்து விசாரணை செய்தபோது, அவர்கள் உடமையில் 13,000 ரூபாய் பணம் இருந்துள்ளது.

இருவரிடமும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.

Related Posts