Ad Widget

 உப தவிசாளர் மீது தாக்குதல்

சாவகச்சேரி நகர சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரும் சபையின் உபதவிசாளருமான குந்தன் யோகராஜாவை, திங்கட்கிழமை (06) இரவு இனந்தெரியாத நபர்கள் தாக்கியதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

வரணி இயற்றாலை பகுதியிலுள்ள அவரது வீட்டுக்குச் சென்ற இனந்தெரியாத நபர்கள் அவரைத் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுவிட்டனர்.

இது தொடர்பில் உபதவிசாளர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் கூறினர்.

Related Posts