Ad Widget

ஹோலிப்பண்டிகை நடாத்த யாழ் மாநகரசபை அனுமதி மறுப்பு! எதிர்ப்புக்களை அடுத்து ஆணையாளர் முடிவு!

எதிர்வரும் நவம்பர் 27ம் திகதி காலை 9 மணி முதல் 5 மணி வரை யாழ் மாநாகரசபை திடலில் ஹோலிப்பண்டிகை கொண்டாடப்படவுள்ளதாக Rathee Event Management நிறுவனம் விளம்பரப்படுத்தியிருந்தது. தனது விளம்பரத்தில் முதன்முறையாக ஹோலிப்பண்டிகை அறிமுகம் என தெரிவித்திருந்தது. இது முன்னர் 20 ம் திகதி என்றும் பின்னர் 27ம் திகதி என்றும் மாற்றப்பட்டு இறுதியாக எதிர்ப்புக்களை அடுத்து  டிசம்பர் 11ம் திகதிக்கும் மாற்றப்பட்டு விளம்பரப்படுத்தியிருந்தது

இது தொடர்பில் சமூக வலைத்தளத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. எந்தவிதத்திலும் எமது இனத்துடனோ மதத்துடனோ சம்பந்தமற்ற கலாச்சாரத்தில் இல்லாத எமது மக்களுக்கு பொருத்தமற்ற ஒரு பண்டிகை யாழ் பிராந்தியத்தில் நடைபெறுவது வரவேற்கப்படக்கூடிய ஒன்றல்ல என்று எதிர்ப்பாளர்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.

கோலிப்பண்டிகையானது வட இந்தியாவில் மார்ச் மாதத்தில் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. பொருத்தமற்ற பிரதேசத்தில் பொருத்தமற்ற காலப்பகுதியில் இங்கு தனியார் நிறுவனம் ஒன்று ஊடாக ஏற்பாடு செய்யப்படுவது ஏன் என்று அவர்கள் கேள்வி எழுப்பினர்

குறித்த நிகழ்வை தடுத்து நிறுத்துமாறு கோரி வடமாகாணசபை முதலமைச்சருக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் முறைப்பாடுகளை சில சமூக ஆர்வலர்கள் அனுப்பிவைத்திருந்ததன் அடிப்படையில்   எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால்  தற்போது நிகழ்வுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது .

இதுகுறித்து  வடமாகாணசபை  அமைச்சு வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவல்களின்படி

மாநகரசபையில் குறித்த பண்டிகையினை சாயப்பூச்சுக்கள் பயன்படுத்தியும் களியாட்ட நிகழ்வாகவும் நடாத்துவதற்கு நவம்பர் 19, 20 ம் திகதிகளுக்கு மாநரசபை மைதானத்தை பெற்றுக்கொள்ள குறித்த நிறுவனத்தால் விண்ணப்பிக்கப்பட்டிருந்ததாகவும்.

குறித்த பண்டிகை புதிய விடயம் என்பதாலும்  பிராந்தியத்துக்கு பொருத்தமற்றது என்பதாலும்  பொருத்தமற்ற காலப்பகுதியில் நடைபெறுவதால் பதட்டத்தை ஏற்படுத்தும் என்பதாலும் தங்களால் அனுமதி வழங்கப்பட முடியாது எனவும் இது தொடர்பில் அனுமதி வழங்குவதாயின் மாகாணசபை அமைச்சுக்கே விண்ணப்பிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதேவேளை நிகழ்வை  தாம் நிறுத்திவிட்டதாக குறித்த நிறுவனம் நேற்றிரவு அறிவித்திருக்கிறது

இது தொடர்பிலான முன்னைய செய்தி

Related Posts