Ad Widget

ஹரிஸ்ணவி கொலை சந்தேக நபருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

வவுனியா பாடசாலை மாணவி ஹரிஸ்ணவி கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரின் விளக்கமறில் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி சந்தேகநபரை 14 நாட்கள் மீண்டும் விளக்கமறியல் வைக்குமாறு வவுனியா மாவட்ட மேலதிக நீதவான் எஸ்.லெனின்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த மாதம் 16ஆம் திகதி வவுனியா பாடசாலை மாணவி ஹரிஸ்ணவி வன்புனர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவரது வீட்டிலிருந்து சடலமாக மீக்கப்பட்டார்.

குறித்த சம்பவம் தொடர்பில், ஹரிஸ்ணவியின் அயல் வீட்டு குடும்பஸ்தர் ஒருவர் சந்தேகத்தின் போரில் கைது செய்யப்பட்டு, கடந்த 26ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலை படுத்தப்பட்டார்.

இதன் போது சந்தேக நபருக்கு 14 நாட்கள் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்து.

இந்நிலையில், குறித்த வழக்கு வவுனியா மாவட்ட மேலதிக நீதவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Posts