Ad Widget

வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது தாக்குதல்!!

அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையினுள் உட்புகுந்த அடையாளம் தெரியாத சிலர் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை கடுமையாக தாக்கியுள்ளனர்.

வைத்தியசாலைக்கு மது போதையில் வந்த சிலர் கடமையிலிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தரைப் தலையில் பலமாக தாக்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், பாதுகாப்பு உத்தியோகத்தரின் அலுவலக ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளதோடு இதனை தடுக்க வந்தவர்களையும் தகாத வார்த்தைகளால் கடுமையாக பேசியுள்ளனர்.

இந்நிலையில், குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸாருக்கு வைத்தியசாலை நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டதையடுத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Related Posts