Ad Widget

வேலைத்திட்டங்கள் தொடர்பில் பிரதியமைச்சர் புஞ்சிநிலமே யாழில் ஆராய்வு

susantha-punjinilameயாழ். மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார்.

யாழ். மாவட்ட செயலகத்திற்கு இன்று வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு வருகை தந்த பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே, மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் மற்றும் அரசாங்க அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

இந்தக் கலந்துரையாடலின்போது பொருளாதார அபிவிருத்தி அமைச்சால் யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளும் வேலைத்திட்டங்கள் தொடர்பான மீளாய்வுகளை மேற்கொண்டார்.

மேலும், முன்னொழியப்பட்ட வேலைத்திட்டங்கள் காலதாமதாவதற்கான பிரச்சினைகள் மற்றும் எதிர்காலத்தில் என்னென்ன வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் பிரதி அமைச்சர் ஆராயவுள்ளார். பொருளாதார அபிவிருத்தி அமைச்சால் மேற்கொள்ளும் வேலைத்திட்டங்களால் மக்கள் பயனடைகின்றார்களா மற்றும் குறைபாடுகள் குறித்தும் பிரதி அமைச்சர் ஆராயவுள்ளார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் வடமாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ், யாழ். மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா உட்பட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே கிளிநொச்சி மாவட்டத்திற்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

Related Posts