Ad Widget

வெளி மாவட்டங்களுக்கான தனியார் பஸ் தரிப்பிடம் விரைவில் புனரமைப்பு

busstandவெளிமாவட்டங்களுக்கான தனியார பஸ் தரிப்பிடம் விரைவில் புனரமைக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட கூட்டிணைக்கப்பட்ட தனியார் பஸ் கம்பனிகளின் தலைவர் கெங்காதரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“வெளி மாவட்டங்களுக்கான பஸ் தரிப்பிடம் யாழ்.புல்லுக்குளம் பகுதியில் தற்போது அமைந்துள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக இவ்விடம் சேரும், சகதியுமாக காணப்படுவதால் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வது தொடர்பில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

யாழ். அரச அதிபர், யாழ். மாநகர சபை முதல்வர் ஆகியோர் இணைந்து இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டனர்.

இதன்போது தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் நிதியில் யாழ்.மாநகர சபையும் இணைந்து தனியார் பஸ் நிலையத்தை புனரமைப்பு செய்வதென தீர்மானித்துள்ளது.

புனரமைப்பு செய்வதற்கான உத்தேச மதிப்பீட்டினை கணிப்பிட்டு தருமாறு யாழ்.அரச அதிபர் யாழ்.மாநகர சபை பொறியிலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், உத்தேச மதிப்பீட்டினை கணிப்பிடுவதற்காக ஒருவார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஒருவாரத்தின் பின்பு வெளிமாவட்டங்களுக்கான பஸ் தரிப்பிட நிலையம் புனரமைப்பு செய்யப்படவுள்ளது” என அவர் மேலும் கூறினார்.

Related Posts