Ad Widget

வெளிப்படைத் தன்மை, பொறுப்புக் கூறல் என்பன அரசியல்வாதிகளுக்கு இருக்க வேண்டிய முக்கிய பண்புகள்!!

வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புக் கூறல் என்பன அரசியல்வாதிகளுக்கு இருக்க வேண்டிய முக்கிய பண்பு என வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வட மாகாணத்தில் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான ஒரு நாள் பயிற்சிப் பட்டறை நேற்று (வெள்ளிக்கிழமை) யாழில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே வடக்கு முதல்வர் இதனை கூறியுள்ளார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”நாம் வெளிப்படைத் தன்மையுடன் செயற்பட்டால், அது நம்மை மோசடிகளில் ஈடுபட இடமளிக்காது. அதேவேளை, பொறுப்புக்கூறல் என்பது அனைத்து அரசியல்வாதிகளினதும், அலுவலகர்களினதும் கடமையாகும். அதனை செவ்வனே செய்ய யாவரும் முன்வர வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Related Posts