Ad Widget

வெளிநாடு ஒன்றில் தஞ்சம் கோருவதற்காக புலிகளின் சீருடை அணிந்த இருவர் கைது

தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவச் சீருடை அணிந்து புகைப்படம் பிடித்த மற்றும் அதனைத் தம்வசம் வைத்திருந்த இருவரை இரகசிய புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து நேற்றைய தினம் யாழ். கைதடி மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் வைத்து இவர்கள் இருவரையும் கைதுசெய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சோதனையின்போது, இராணுவச் சீருடை ஒன்று, ஆயுத உறை ஒன்று, இராணுவத் தொப்பிகள் இரண்டு ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.

விசாரணைகளை அடுத்து இரகசிய புலனாய்புப் பிரிவினர் சந்தேகநபர்களை சாவகச்சேரிப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதேவேளை இவர்கள் வெளிநாடு ஒன்றில் தஞ்சம் கோருவதற்காகவே தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடை அணிந்து புகைப்படம் எடுத்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்களை இன்றைய தினம் சாவகச்சேரி நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Related Posts