Ad Widget

வெளிநாடுகளில் இருந்து வருகை தந்த 170 இலங்கையர்கள் தனிமைப்படுத்தலை தவிர்த்துள்ளனர்- பாதுகாப்பு அமைச்சு

இத்தாலி மற்றும் கொரியாவிலிருந்து வருகை தந்த 170 இலங்கைப் பிரஜைகள் தனிமைப்படுத்தல் நடவடிக்கையிலிந்து, தவிர்ந்து செயற்படுவதாக பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “குறித்த நபர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு செல்லாது, தமது வீடுகளில் குடும்பத்தினருடன் தங்கியுள்ளனர்.

தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், இவர்கள் அனைவரும் கட்டாயம் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டியவர்கள். இது குறித்து 119 என்ற பொலிஸ் பிரிவை தொடர்பு கொண்டு அறிவிக்க வேண்டும்.

அத்துடன், அவர்கள் தனிமைப்படுத்தப்படும் மையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட மாட்டார்கள். மாறாக பொது சுகாதார பரிசோதகர்களின் உதவியுடன் அவர்களது சொந்த வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்படுவார்கள்.

இந்நிலையில், அவர்கள் இதற்கு மாறாக செயற்படும் பட்சத்தில், நோய்த் தடுப்பு கட்டளை சட்டத்தின் கீழ், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என, குறிப்பிட்டுள்ளார்.

Related Posts