Ad Widget

வெல்டிங் வேலை செய்தவர் தவறி விழுந்து உயிரிழந்தார்

கோண்டாவில் பகுதியிலுள்ள வீடொன்றில் செவ்வாய்க்கிழமை (24) வெல்டிங் வேலை செய்துகொண்டிருந்தவர் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்.அரியாலை பகுதியை சேர்ந்த எஸ்.ஆனந்த் (வயது 42) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

நிறுவனம் ஒன்றில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் இவர், வீடொன்றின் உயரத்தில் வேலை செய்துகொண்டிருந்த போது, தவறி வீழ்ந்துள்ளார். இவருடன் பணியாற்றியவர்கள் உடனடியாக அவரை வைத்தியசாலைக்கு கொண்டு வந்தபோதும் அவர் ஏற்கெனவே உயிரிழந்திருந்தார்.

Related Posts