Ad Widget

வெடி கொளுத்துவதில் முரண்பாடு, நால்வர் படுகாயம்!

fight-warதுன்னாலை ஆத்துப்பட்டி பகுதியில் இறந்த ஒருவரின் இறுதி ஊர்வலத்தின் போது குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நேற்றய தினம் (27) அனுமதிக்கப்பட்டுள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

இறுதி ஊர்வலத்தில் வெடி கொளுத்தி சென்றவர்களின் மத்தியில் ஏற்பட்ட கருத்து முரண்பாடே இம்மோதலுக்கு காரணம் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Posts